Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அதெல்லாம் யுவன் பாத்துப்பான்... கேமரா மேனிடம் கூறிய செல்வராகவன்
சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தின் கதையையும் எழுதியுள்ளாராம்.
தனுஷின் கர்ணன் படத்தை தயாரித்திருந்த தானுதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
ஸ்பெயினில் இந்திய கொடியை பறக்க விட்ட நயன்தாரா-விக்கி.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
புதுப்பேட்டை கூட்டணி
படத்திற்காக மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்களோ என்னவோ. ஆனால் இந்தப் படத்தின் இசைக்காக மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். காரணம் இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இடையில் இருவரும் பிரிந்தாலும் மீண்டும் என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். இருந்தாலும் பழைய மேஜிக் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் இம்முறை தனுஷும் இந்த கூட்டணியுடன் இணைந்திருப்பதால் மீண்டும் பழைய மேஜிக் ரிப்பீட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக செல்வா யுவனின் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது புதுப்பேட்டை படத்தின் பாடல்கள் தான். புதுப்பேட்டை தான் இவர்கள் மூவர் கூட்டணியும் இடம் பெற்றிருந்த கடைசி படம்.
நினைவலைகள்
இருவரும் சேர்ந்து பணியாற்றியதில் சில முக்கியமான தருணங்களை இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளனர். அதில் கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை பாடலுக்கு பதிலாக வேறு ஒரு பாடல் தான் இருந்ததாகவும் கடைசி நிமிடத்தில் யுவனின் வேண்டுகோளுக்கிணங்க செல்வராகவன் ஒப்புக் கொண்டதால் தான் அந்தப் பாடலை நீக்கிவிட்டு கண் பேசும் வார்த்தைகளை இசையமைத்து புதிதாக உருவாக்கியதாகவும் யுவன் கூறினார். செல்வராகவன் அனுமதி கொடுத்ததால் தான் அந்தப் பாடல் கிடைத்தது என்று செல்வராகவனை யுவன் பாராட்டி இருந்தார். அதேபோல காதல் கொண்டேன் திரைப்படத்தில் டஸ்டர் காட்சிக்கு பின்னணி இசை அமைத்திருந்தபோது தனது கைகளைப் பற்றிக் கொண்டு மெய் சிலிர்த்து போனார் செல்வா என்று நினைவு கூர்ந்தார் யுவன் சங்கர் ராஜா.
ஆஸ்கர் விருது
புதுப்பேட்டை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு பேசிய விருது கிடைக்கக் கூடும் என்ற பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் கொடுத்த அந்தப் பேட்டியில் யுவன் சங்கர் ராஜா திறமைக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும், அவ்வளவு திறமையானவர் என்று செல்வராகவன் யுவனை மனதார பாராட்டினார்.
யுவன் பாத்துப்பான்
துள்ளுவதோ இளமை திரைப்படத்தை இயக்கியிருந்தாலும் செல்வராகவன் தனது பெயரை முதல் முறையாக இயக்குநர் என்று போட்டுக் கொண்டது காதல் கொண்டேன் திரைப்படத்தில் தான். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெறவே செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா மற்றும் தனுஷ் ஆகிய மூவர் மீதும் திரைத் துறையினரின் பார்வை விழ ஆரம்பித்தது. மூவருடைய படங்களுக்கும் எதிர்பார்ப்பு கூடிய அந்தச் சமையத்தில் எடுக்கப்பட்டது தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய காட்சிகள் வசனங்கள் இல்லாமல் அமைதியாகவே ஷாட்ஸ் இருந்ததாம். ஒரு முறை படத்தின் கேமரா மேன் பயந்து போய்,"என்ன செல்வா நெறைய சீன்ஸ்ல வசனமே இல்லாம நடிகர்கள் அமைதியாவே இருக்காங்களே. ஏதாவது ஆயிட போகுது" என்று சொல்ல செல்வாவோ மிகவும் கேஷுவலாக,"அதெல்லாம் யுவன் பாத்துப்பான்" என்று சொன்னாராம். அதேபோலத்தான் யுவனின் மேஜிக் அந்தப் படத்தின் வெற்றியையும் உறுதி செய்தது.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?