Don't Miss!
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அதெல்லாம் யுவன் பாத்துப்பான்... கேமரா மேனிடம் கூறிய செல்வராகவன்
சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தின் கதையையும் எழுதியுள்ளாராம்.
தனுஷின் கர்ணன் படத்தை தயாரித்திருந்த தானுதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
ஸ்பெயினில் இந்திய கொடியை பறக்க விட்ட நயன்தாரா-விக்கி.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
புதுப்பேட்டை கூட்டணி
படத்திற்காக மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்களோ என்னவோ. ஆனால் இந்தப் படத்தின் இசைக்காக மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். காரணம் இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இடையில் இருவரும் பிரிந்தாலும் மீண்டும் என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். இருந்தாலும் பழைய மேஜிக் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் இம்முறை தனுஷும் இந்த கூட்டணியுடன் இணைந்திருப்பதால் மீண்டும் பழைய மேஜிக் ரிப்பீட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக செல்வா யுவனின் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது புதுப்பேட்டை படத்தின் பாடல்கள் தான். புதுப்பேட்டை தான் இவர்கள் மூவர் கூட்டணியும் இடம் பெற்றிருந்த கடைசி படம்.
நினைவலைகள்
இருவரும் சேர்ந்து பணியாற்றியதில் சில முக்கியமான தருணங்களை இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளனர். அதில் கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை பாடலுக்கு பதிலாக வேறு ஒரு பாடல் தான் இருந்ததாகவும் கடைசி நிமிடத்தில் யுவனின் வேண்டுகோளுக்கிணங்க செல்வராகவன் ஒப்புக் கொண்டதால் தான் அந்தப் பாடலை நீக்கிவிட்டு கண் பேசும் வார்த்தைகளை இசையமைத்து புதிதாக உருவாக்கியதாகவும் யுவன் கூறினார். செல்வராகவன் அனுமதி கொடுத்ததால் தான் அந்தப் பாடல் கிடைத்தது என்று செல்வராகவனை யுவன் பாராட்டி இருந்தார். அதேபோல காதல் கொண்டேன் திரைப்படத்தில் டஸ்டர் காட்சிக்கு பின்னணி இசை அமைத்திருந்தபோது தனது கைகளைப் பற்றிக் கொண்டு மெய் சிலிர்த்து போனார் செல்வா என்று நினைவு கூர்ந்தார் யுவன் சங்கர் ராஜா.
ஆஸ்கர் விருது
புதுப்பேட்டை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு பேசிய விருது கிடைக்கக் கூடும் என்ற பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் கொடுத்த அந்தப் பேட்டியில் யுவன் சங்கர் ராஜா திறமைக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும், அவ்வளவு திறமையானவர் என்று செல்வராகவன் யுவனை மனதார பாராட்டினார்.
யுவன் பாத்துப்பான்
துள்ளுவதோ இளமை திரைப்படத்தை இயக்கியிருந்தாலும் செல்வராகவன் தனது பெயரை முதல் முறையாக இயக்குநர் என்று போட்டுக் கொண்டது காதல் கொண்டேன் திரைப்படத்தில் தான். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெறவே செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா மற்றும் தனுஷ் ஆகிய மூவர் மீதும் திரைத் துறையினரின் பார்வை விழ ஆரம்பித்தது. மூவருடைய படங்களுக்கும் எதிர்பார்ப்பு கூடிய அந்தச் சமையத்தில் எடுக்கப்பட்டது தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய காட்சிகள் வசனங்கள் இல்லாமல் அமைதியாகவே ஷாட்ஸ் இருந்ததாம். ஒரு முறை படத்தின் கேமரா மேன் பயந்து போய்,"என்ன செல்வா நெறைய சீன்ஸ்ல வசனமே இல்லாம நடிகர்கள் அமைதியாவே இருக்காங்களே. ஏதாவது ஆயிட போகுது" என்று சொல்ல செல்வாவோ மிகவும் கேஷுவலாக,"அதெல்லாம் யுவன் பாத்துப்பான்" என்று சொன்னாராம். அதேபோலத்தான் யுவனின் மேஜிக் அந்தப் படத்தின் வெற்றியையும் உறுதி செய்தது.