யுவன் சங்கர் ராஜா - ஷில்பா காதல் திருமணம்... இளையராஜா முன்னிலையில் திருப்பதியில் நடந்தது!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 2-வது மகன் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் இப்போதைய நம்பர் ஒன் இசையமைப்பாளர் இவர். ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி சுஜயாவுக்கும் யுவனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து நடந்தது. சுஜையாவுக்கு வேறு திருமணமும் நடந்துவிட்டது.
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஷில்பா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷில்பா பி.பார்ம். படித்தவர். ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக இருக்கும் மோகன்-மைதிலி தம்பதியரின் மகள்.
யுவனும் ஷில்பாவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்திற்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா - ஷில்பா திருமணம் திருப்பதியில் நேற்று காலை 10.20 மணிக்கு நடந்தது.
திருமணத்தில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா, மணமகளின் பெற்றோர் மோகன்-மைதிலி, இசையமைப்பாளரும், யுவன் சங்கர் ராஜாவின் அண்ணனுமான கார்த்திக் ராஜா, சித்தப்பா கங்கை அமரன், அவருடைய மகன்கள் டைரக்டர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி, பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர், வாசுகி பாஸ்கர், பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், சுப்பு பஞ்சு, இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர்கள் கிருஷ்ணா, சிவா, வைபவ், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











