Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆர்த்தி நடிக்க வந்த கதை தெரியுமா?
இன்றைக்கு சென்னையில் செட்டில் ஆகிவிட்டாலும் ஆர்த்தியின் பிறந்த ஊர் ஊட்டி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆர்த்தி தனது கணவர் கணேஷ்கருடன் சிறுவயதில் என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கவே குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். 63 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆர்த்தி பொதிகை தொலைக்காட்சியில் வந்த கதையின் கதை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.
சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் 10 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆர்த்தி சினிமாவில் 2004 ம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சில சீன்களில் நடித்தாலும் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது.
நடிகை மந்த்ரா வடபழனி ஜே. ஆர்.கே. ஸ்கூலில் ஆர்த்தியின் கூட படித்தவராம். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் ஆகியோர் இவரின் ஸ்கூல் சீனியர்ஸ். முதலில் ஒல்லியாகத்தான் இருந்த ஆர்த்தி, மீனாட்சி கல்லூரியில் படிக்கும் போது அருகில் இருந்த பேக்கரியில் ஜூஸ், ஸ்நாக்ஸ் வாங்கி குடித்து குண்டாகி விட்டாராம்.
சினிமா, சின்னத்திரை என உற்சாகமாக நடித்து வரும் ஆர்த்தி தன்னுடன் சிறுவயதில் இருந்து நடித்த கணேஷ்கரை திருமணம் செய்து கொண்டார். கலைஞர் தொலைக்காட்சியில் மாயா மாயா, மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆர்த்தி கணேஷ்கர் ஜோடி தற்போது சிரிப்பொலி தொலைக்காட்சியில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியினை இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.