Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
63 நாயன்மார்கள்... தந்தி டிவியில் அசத்தல் தொடர்
தந்தி டிவியில் 63 நாயன்மார்களைப் பற்றிய வாழ்க்கைக் கதை தொடராக ஒளிபரப்பாக உள்ளது. இதனை பிரபல நடிகை குட்டி பத்மினி தயாரித்துள்ளார்.
சைவத்தையும் தமிழில் பக்தி இலக்கியத்தையும் வளர்த்தெடுத்ததில் சைவ சமய குரவர்களுக்கு பெரும் பங்குண்டு. சைவசமயத் திருத்தொண்டர்கள் பெருமையை சேக்கிழார் பெரிய புராணமாக எழுதினார்.
நாயன்மார்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடிக்கும் இந்த தொடர், எல்லோர் மனதிலும் தமிழ் சுவையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்ந்த இடங்கள்
பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயன்மார்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்தும் சிறப்பாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் வாழ்ந்த இடங்களுக்கே சென்று, படப்பிடிப்பு செய்யும் வேலையும் நடந்து வருகிறது.
தஞ்சாவூர் - கும்பகோணம்
நவக்கிரக தலங்கள் அமைந்துள்ள தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு செய்திகள் படமாக்கப்பட்டு வருகிறது. கி.பி 400-ல் வாழ்ந்திருந்த சிவனடியார்கள் பற்றிய சுவையான செய்திகளை, மிக நேர்த்தியுடன் தயாரித்து வருகிறார்கள்.
தந்தி டிவி
நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்களது வாழ்க்கையையும், சைவ சமய மற்றும் தமிழ்த் தொண்டையும் தந்தி டி.வி விரைவில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு புராணத் தொடராக வழங்க இருக்கிறது.
குட்டி பத்மினி
தொடரில் சஞ்சய்- சுந்தரமூர்த்தி சுவாமிகளாகவும், லாவண்யா- பறவை நாச்சியாராகவும், ரஞ்சிதா- சங்கிலி நாச்சியாராகவும், சுபத்ரா எழுத்தாளர் சிவானியாகவும் வருகிறார்கள். ரவிசங்கர், சித்ரா, கிருஷ்ணா, மணிகண்டன், ஷியாம், சாஜன் ஆகியோர் ஏனைய நட்சத்திரங்கள்.உரையாடல்: கே.பி.அறிவானந்தம். இசை: ரவிராகவ். ஒளிப்பதிவு: பார்த்திபன். திரைக்கதை, இயக்கம்: ஜி.தனுஷ். தயாரிப்பு: திருமதி.குட்டிபத்மினி.