Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தெய்வ சக்திக்கும்...தீய சக்திக்கும் நடக்கும் கல்யாணம்.... அருந்ததி!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல்... கலகலப்பான திகில் தொடர்னு சன் டிவி விளம்பரம் செய்யறாங்க.
திகில், கலகலப்பு ரெண்டுமே இந்த அருந்ததி சீரியலில் இன்னும் சரியா காமிக்க ஆரம்பிக்கலை.
உண்மையில் தெய்வ சக்திக்கும்...அதுவும் தமிழ் கடவுள் முருகன் சக்திக்கும், அருந்ததி பேயின் தீய சக்திக்கும் நடக்கும் போராட்டமும், போட்டியும்தான் கதை எனும் போது இயற்கையாவே சீரியலின் மேல் ஆர்வம் கூடுது.
பலே...பலே மாயக்கா...இதோ நானும் களத்துல இறங்கறேன்....!
நம்பூதிரி ரஞ்சனி
ஈஸ்வரி அம்மா தன் குடும்பத்துக்கு தீய சக்தி எந்த வித கெடுதலையும் தரக் கூடாது என்பதில், நம்பூதிரி அம்மா ரஞ்சனியை ரொம்ப நம்பறாங்க. ரஞ்சனி அம்மாவும் அப்படித்தான் இருந்தாங்க. ஆனால், தீய சக்தி யார் உடம்புக்குள்ளேயோ போயிருச்சுன்னு நம்பூதிரி அம்மா நினைச்சு சண்முகத்தை சந்தேகமா பார்க்கறாங்க.
தன் சக்திக்குள்
தன்னை பேய்னு கண்டு பிடிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சுக்கிட்ட அருந்ததி பேய்..என்னென்னெவோ செய்து, ரஞ்சனி அம்மாவையும் தன் வசப்படுத்தி, தான் சொல்வதை கேட்கும்படி மாத்திருது. ஆனா, ஈஸ்வரி அம்மா பாவம்.. அவங்க இன்னும் பழைய நம்பூதிரி அம்மாதான்னு நினைச்சு அவங்ககிட்ட கல்யாணப் பொறுப்பை கொடுக்கறாங்க.
நலுங்கு வைக்கையில்
சண்முகத்துக்கு பெண்கள் நலுங்கு வைக்கையில், அவனுக்கு சந்தனம், குங்குமம், கற்பூர ஆரத்தி, பெண்கள் கையில் அணிந்து இருக்கும் காப்பு எல்லாமே அவனது உடலை அக்னியாய் சுட வைக்குது.
ரஞ்சனி எங்கே
இந்த ரஞ்சனி எங்கேன்னு சண்முகம் தேடறான்... அவள் கண்முன்னால் வந்து நிற்க.... இதைப் பாரு... இதெல்லாம் என்னால தங்கிக்க முடியலை... ஏதாவது செய்து இதை மாத்துன்னு சொல்றான்.
அம்மா நம்பூதிரி
நம்பூதிரி அம்மா, இரு இருன்னு சொல்லிட்டு, எலுமிச்சம் பழத்தை கையில வச்சு மந்திரம் சொல்லி உருட்டறாங்க... சண்முகத்துக்கு எரிச்சல் நின்னுருது.
இப்போ நம்பூதிரி அம்மாவும் தீய சக்தி பக்கம் சேர்ந்துட்டதால தெய்வானைதான் ஒரே நல்ல சக்தி. என்ன நடக்குது பார்க்கலாம்.