Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’
அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கோ கிரீன் என்ற நிகழ்ச்சியை ஸ்ரீ சங்கரா டிவி ஒளிபரப்புகிறது.
கோ கிரீன்'' என்ற தலைப்பு நமக்கு இரண்டு விஷயங்களைப்பற்றி கூறுகின்றது. அதாவது, ''கோ'' என்றால் பசு மற்றும் ''கிரீன்'' என்றால் ''பச்சை'', அதாவது ''சைவ உணவு முறை.''
சைவ உணவு முறையை ஆங்கிலத்தில் ''வெஜிடேரியனிசம்'' என்பர். லத்தின் மொழியின் ''வெஜிடஸ்'' என்ற வார்த்தையிலிருந்து நிறுவப்பட்ட ''வெஜிடேரியனிசம்'' என்பதன் பொருள். நாம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சைவ உணவு முறையை பின்பற்றி வாழ்வதே மனித குலத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுவே நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
பண்டைய காலத்து இந்தியர்களின் உணவு முறை அகிம்சையை பின்பற்றி உருவாக்கப்பட்டது. அவர்கள் மற்ற விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது மட்டுமல்லாமல், பசுவை காப்பதிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். மனித நேயம், மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், ஆன்மிகம் என பல துறைகளுடன் ''கோ சம்ரஷணம்'' சம்பந்தப்பட்டுள்ளது.
பண்டைய காலத்து சைவ உணவு முறை மற்றும் கோ சம்ரஷணம் அதாவது பசுவை பாதுகாத்தல் என்கின்ற இவ்விரண்டு விஷயங்களையும் நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும்.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, ''கோ கிரீன்.''