Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜீ தமிழில் காயத்ரி… ஏழைப்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!
திங்கள் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'காயத்ரி' எனும் புத்தம் புதிய தொடர் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
உயர்ந்த லட்சியங்களும், நல்ல எண்ணங்களும், போராட்ட குணமும் உள்ள ஒரு ஏழைப் பெண்ணின் கதை இது.இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
அவளுக்கு அவமானங்கள் ஏற்படும்போதெல்லாம் 'நான் ஏழையாகப் பிறந்தது என் குற்றமல்ல... ஆனால் ஏழையாகவே இறந்து போனால் அது என் குற்றம்...' எனும் மந்திரத்தை உச்சரிப்பவள்.
காயத்ரியின் வாழ்க்கை
சமூக அங்கீகாரம் இல்லாத ஒரு இட்லிக்கடைத் தாய்க்குப் பிறந்தவள் காயத்ரி. சூழ்நிலையினாலும், வறுமையினாலும் தான் விரும்பிய பெண்ணை விட்டுவிட்டு, குடும்ப நிர்ப்பந்தத்தினால் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் காயத்ரியின் தந்தை.
தாய்க்கு அங்கீகாரம்
அந்தப் பணக் காரப் பெண் மிகவும் திமிர் பிடித்தவள். கொலை செய்வதற்குக்கூட அஞ்சாதவள். ஆனால், காயத்ரி அவளது தந்தை மூலம் தாயின் கழுத்தில் ஒரு தாலியைக் கட்ட வைத்து அம்மாவிற்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தர ஆசைப்படுகிறாள்.
சித்தியின் சூழ்ச்சி
காயத்ரியின் விருப்பம் நிறைவேறியதா? இதை அறிந்த அந்த பணக்காரத் திமிர் பிடித்த சித்தி அதிபயங்கர சூழ்ச்சிகளை உருவாக்குகிறாள்.
காயத்ரியின் வெற்றி
அந்த சூழ்ச்சியில் காயத்ரி வீழ்ந்தாளா...? வென்றாளா...? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்களுடன் காட்சிப்படுத்துகிறது தொடர்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஏ.பி.ராஜேந்திரன் இயக்குகிறார்.