Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீ குடுத்தது பார்வதி தொட்ட மாங்கா.. இது அவ கடிச்ச மாங்கா... ஆதி ஆஹா..ஃ பீலிங் ...!
Recommended Video
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு பொண்ணுங்க ஃபேன்ஸ் அதிகம். இவன் திருட்டு கல்யாணம் செய்துகிட்ட பார்வதி ரொம்ப அழகா இருக்காங்க.
இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு தெரியாது. தனிமையில் இருவரும் ரொமான்ஸ் செய்துக்கிட்டாலும், மத்தவங்க பார்வைக்கு பார்வதி ஆதியின் மனைவி இல்லை.
வீட்டு வேலைக்காரியாத்தான் பார்வதி காலம் கடத்திகிட்டு இருக்கா. ஆதியை மாமான்னு ஆசையா கூப்பிடறதுன்னு ஆதி மேல் ரொம்ப காதலுடன் இருப்பா பார்வதி.
ஓடிப் போய் கட்டிப் பிடிக்க நினைக்கறா ஜனனி... கட்டுப்படுத்திகிட்டு நிக்கறான் சந்தோஷ்...!
மாங்காய்
மாமா மாங்காய் குடுத்து விட்டேனே சாப்பிட்டீங்களான்னு கேட்கறா பார்வதி. ம்ஹூம்.. இல்லைன்னு சொல்றான். என்ன மாமா நீங்க உங்களுக்கு மாங்காய் பிடிக்கும்ன்னு ஆசையா கட் பண்ணி உப்பு, மிளகாய் தூள் தூவி குடுத்து விட்டேன்.. சாப்பிடாம வந்துட்டீங்க.. இருங்க வேற கட் பண்ணித்த தரேன்னு சொல்றா பார்வதி.
கடிச்சு சாப்பிட்டாதான்
இல்ல பார்வதி.. மாங்காய் கடிச்சு சாப்பிட்டாதான் ருசியா இருக்கும். ஒரு மாங்காய் எடுன்னு சொல்றான். அவ எடுத்து அருகில் வர போக, நீ சுத்திகிட்டு வர வேணாம்.. அங்கேயே இருந்து தூக்கி போடு, நான் கேட்ச் புடிச்சுக்கறேன்னு சொல்றான்.
புளிக்குதான்னு
இரு பார்வதி.. அந்த மாங்காய் புளிக்குதான்னு கடிச்சு பாரு.. புளிச்சா எப்படி சாப்பிடறதுன்னு கேட்கறான். ஆமாம் மாமா இருங்க சாப்பிட்டு பார்த்துட்டு சொல்றேன்னு கடிக்கறா. ஐயோ இந்த மாங்காய் புளிக்குது மாமான்னு சொல்றா
மாங்காய்
பரவால்ல குடு.. அணில் கடிச்ச மாங்காய் மாதிரி நீ கடிச்ச மாங்காய் எனக்கு இனிக்கும்னு சொல்லிட்டு, அவளை பார்க்கறான். அவள் வெட்கப்பட்டுக்கிட்டே மாங்காயைத் தூக்கி போடறா. அவன் அவள் எதிரில் உட்கார்ந்து மாங்காயை கடிச்சு ருசிச்சு சாப்பிடறான்.
பார்வதி கடிச்ச
அப்போ மாடியில் இருந்து இறங்கி வந்த நண்பன், ஏண்டா அங்க மாங்காய் பார்வதித்தான் குடுத்தன்னு சொன்னேன்.. வேணாம்னு சொல்லிட்டு வந்துட்ட.. இங்க இப்படி ருசிச்சு கடிக்கறேன்னு சொல்றான். அது பார்வதி தொட்டு குடுத்த மாங்காய். இது பார்வதி கடிச்சு குடுத்த மாங்காய்னு சொல்றான்.. என்னமோ போன்னு கிளப்புறான் அவன்.