‘மானாட மயிலாட 7’ சிறப்பு விருந்தினர் டாப்ஸி

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட பகுதி 7ன் இறுதிப் போட்டி மலேசியாவில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 8 ம் தேதி மாலாவதி உள் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நான்கு ஜோடிகள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
மலேசியாவில் உள்ள தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நடிகர், நடிகையர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக், நடிகை டாப்ஸி பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானாட மயிலாட பகுதி 7ன் நடுவர்களாக நடன இயக்குநர் கலா, நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications