Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமீர் கானின் ‘சத்யமேவ ஜெயதே’ ரேட்டிங்சரிகிறதா
இந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ 'சத்யமேவ ஜெயதே', ஸ்டார் ப்ளஸ், டிடி, ஸ்டார் விஜய் ஆகிய தொலைக்காட்சிகளில் ஞாயிறுதோறும் 11.30 மணியளவில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிகழ்ச்சி தொடங்கிய மே மாதத்தில் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை 3.8 சதவிகிதம் பேர் பார்த்துள்ளதாக TVR எனப்படும் Television Viewer Ratings தெரிவித்துள்ளது. அதுவே ஜூன் மாதத்தில் வெறும் 2.9 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர். அதே சமயம் மாதுரி தீக்ஷித் இயக்கியுள்ள Jhalak Dikhhla Jaa தொடர் 4.1 சதவிகிதம் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. அதேசமயம் மாதுரி தீக்ஷித்தின் நிகழ்ச்சி நடனம் தொடர்புடைய நிகழ்ச்சி என்பதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ரேஸில் புதிதாக அமிதாப் பச்சனின் கோன் பனேகா குரோர்பதி இணையப்போகிறது. கடந்த ஆண்டு கோன் பனேகா குரோர்பதி சீசன் 4 நிகழ்ச்சியை 6.4 சதவிகித பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக தொலைக்காட்சி ரேட்டிங்கில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியைப் போன்று வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை பார்வையாளர்கள் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமீர்கான் டிஆர்பி என்பது மாறுதலுக்கு உட்பட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று முதலில் வரும் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி நிச்சயம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவே அந்த நிகழ்ச்சியின் வெற்றியை நிர்ணயித்து விடும் என்றும் கூறியுள்ளார்.
சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியில் மருத்துவத்துறை பற்றியும் மருத்துவர்களின் கட்டணக்கொள்ளை பற்றியும் அமீர்கான் பேசியது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.