Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கவினை அழைத்து கட்டிப்பிடித்த அபிராமி.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்? சகிக்கல!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று மீராவை அழவிட்ட அபிராமி ஹவுஸ் மேட்ஸின் சப்போர்ட்டை செக் செய்ய தானும் அழுது சீன் கிரியேட் செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் அழுகை ஒரு பக்கம் சண்டை என எதிர்பார்த்தப்படியே நிகழ்ச்சி களைக்கட்ட தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சென்டிமென்ட் சம்பவங்களை விட சண்டைகளையே பார்வையாளர்கள் அதிகம் வரவேற்றுள்ளனர். அப்படியாக நேற்று நடந்த சண்டை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டுள்ளது.
சண்டைபோடும் அபி
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே மீராவை அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அவரை முகத்தில் அடித்தாற்போல் பேசினார் அபிராமி.
வனிதா அபிக்கு ஆதரவு
இதனால் ஏற்பட்ட சிறிய பிரச்சனையை பெரிதாக்கிய வனிதா கடுமையாக பேசினார். கேப்டன் பொறுப்பில் இருக்கும் வனிதா பொதுவாக நடந்துகொள்ளாமல் குரூப் ஒன்றை ஃபார்ம் செய்து அபிராமிக்கு ஆதரவாக பேசினார்.
உரிமையுடன் பேசி நெருக்கம்
மீராவை கடுமையாக திட்டிய வனிதா அபிராமியை போடி வாடி என உரிமையுடன் பேசி நெருக்கத்தை காண்பித்தார். இதனால் மீரா ஒரு பக்கம் அழ, போட்டிக்கு தானும் அழுதார் அபிராமி.
கவின் ஆறுதல் சொல்லல
உடனே அபிராமியின் நண்பிகள் கும்பலாக பெட்டில் அமர்ந்தபடி அவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது கவின் மட்டும் தனக்கு இன்னும் ஆறுதல் சொல்லவில்லை எனக்கூறி ரொம்பவே ஃபீல் பண்ணினார் அபிராமி.
கைகளை நீட்டி காத்திருந்த அபிராமி
உடனே அவரது ஃபிரன்ட்ஸ் கவினை அழைத்து அபிராமியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுமாறு தெரிவித்தனர். உடனே அபிராமி இதற்குதான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதைப் போல கைகளை நீட்டி கவினை அழைத்தார்.
இதுக்குதானா இவ்வளவு சீன்?
கவின் வந்தவுடன் அவரை கட்டிப்பிடித்தார் அபிராமி. ஏற்கனவே கவினை காதலிப்பதாக கூறிய அபிராமி, அவரிடமும் தன்காதலை கூறினார். ஆனால் பழகிவிட்டு முடிவு செய்யுங்கள் என்றார் கவின். இந்நிலையில் நேற்று கவினிடம் இருந்து கட்டிப்பிடி வைத்தியம் பெறவே அபிராமி அழுது சீன் கிரியேட் செய்ததாக நெட்டிசன் தெரிவித்து வருகின்றனர்.