அடிச்சு மூஞ்ச ஒடைச்சுருவேன்.. சாக்ஷி போட்ட குண்டு.. மீராவை தாக்க தயாராகும் அபிராமி ஐயர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மீராவை அடிச்சு மூஞ்ச ஒடைச்சுறுவேன் என கையை முறுக்கி தயாராகிறார் அபிராமி ஐயர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி ஐயருக்கு ஆர்வ கோளாறு அதிகம் என்பது முதல் நாளிலேயே தெரிந்தது. முதல் நாளே சாப்பாடு சாப்பாடு என அலைந்தார்.
24 மணிநேரத்திற்குள்ளேயே கவின் மீது காதல் என வழிந்தார். ஆனால் அவரது காதலை கவின் ஏற்கவில்லை. ஆனால் அபி மீது பிரியமுடன் உள்ளார்.

முகம் சுளிக்க வைக்கும் அபி
இதைத்தொடர்ந்து தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என வாட்டர் பாட்டிலை வைத்து சீன் போட்டார். அவரது இந்த நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைத்தன.

விளாசிய நெட்டிசன்கள்
அதோடு மீராவிடம் மிகவும் கேவலமாக நடந்துகொண்டார் அபிராமி. இதனால் சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் விளாசி தள்ளினர்.

அபியிடம் பேசக்கூடாது
இந்நிலையில் முகெனும் மீராவும் பேசியதை அரைகுறையாக கேட்டுவிட்டு, பேசாத ஒன்றை பேசியதான கோள்மூட்டிவிடுகிறார் சாக்ஷி. அதாவது, முகெனிடம் நீ இனி அபியிடம் பேசக்கூடாது என மீரா கூறியதாக கூறுகிறார் சாக்ஷி.

நடிக்கும் சாக்ஷி
இதனால் கோபம் கொப்பளிக்க, அடிச்சு மீராவின் மூஞ்ச உடைச்சுறுவேன் என துள்ளுகிறார் அபி. அப்போது நல்லவள் போல் நீ அதெல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம், நீ இங்கேயே இரு என்று கூறுகிறார் சாக்ஷி.

மதுமிதாவுக்கு அறை
ஏற்கனவே மதுமிதா, நல்லதுக்காக கூறியதை தவறாக புரிந்துக்கொண்ட அபிராமி, இதற்கு மேல் பேசினால் அறைந்துவிடுவேன் என மதுமிதாவை கூறினார். தற்போது சாக்ஷி சொன்ன பொய்யை அப்படியே நம்பிவிட்டு மீராவை அடித்து மூஞ்சை உடைக்க தயாராகி வருகிறார் அபிராமி ஐயர்!


Click it and Unblock the Notifications











