Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்னை பார்த்தா உனக்கு எதுவும் பண்ண தோனலயா முகென்.. வெளியாகும் அபிராமி பேசிய காதல் கம் காம வசனங்கள்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகெனிடம் பேசிய காமம் கலந்த வார்த்தைகள் எல்லாம் நேற்றுதான் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்தில் கவின் மீது காதல் கொண்டார். கவின் அபிராமியின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் முகெனிடம் நெருக்கமானார் அபிராமி. நாளடைவில் முகெனையும் காதலிக்க தொடங்கிய அபிராமி, அவரிடமும் தனது காதலை சொன்னார்.
நண்பர்கள்
ஆனால் தனக்கு வெளியில் ஒரு வாழ்க்கை இருப்பதாக கூறிய முகென், அபிராமியின் காதலை ஏற்கவில்லை. நல்ல நண்பர்களாக இருப்போம் என கூறி வந்தார்.
கமலிடம்
ஆனாலும் நான் காதலிக்கிறேன், எப்போவும் காதலித்துக்கொண்டே இருப்பேன், காதலிப்பேன் என்று கூறினார். கமல் கேட்ட போதும் இதையேதான் கூறினார்.
ஜீரோ
ஆனால் பிக்பாஸ் ஹோட்டலுக்கு விருந்தாளியாக வந்த வனிதா, அபிராமியை நீதான் முகென் பின்னாடி அலைகிறாய், நீ ஜீரோவாகிவிட்டாய், அவன் ஹீரோவாகிவிட்டான் என்று இஷ்டத்துக்கு அள்ளிவிட்டார்.
குளிர்ந்காய்ந்தார்
இதையெல்லாம் கேட்டு உக்கிரமான அபிராமி, முகெனுடனான காதலை முறித்துக்கொள்ள காத்திருந்தார். அதற்கேற்றார் போல் நேற்றைய எபிசோடில் பல வழிகளை ஏற்படுத்திக் கொடுத்த வனிதா, நன்றாக கொளுத்தி போட்டு குளிர்காய்ந்தார்.
ஏன் விலகவில்லை?
இதனால் மொத்த குடும்பமும் முகென் மீதுதான் தவறு என பேசியது. அபிராமி காதல் என்று நெருங்கி வந்த போது முகென் ஏன் விலகவில்லை என்ற பிரதான கேள்வியை முன்வைத்தனர்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
அப்போது சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் மட்டுமே முகெனுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள்தான் முகென் பல முறை கூறினான், ஆனால் அபிராமிதான் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை நான் காதலிப்பேன் என்று கூறினாள் என்றனர்.
காம வசனங்கள்
மேலும் என்னை பார்த்தால் உனக்கு எதுவும் தோனலயா என்றும் அபிராமி முகெனிடம் அந்த அர்த்தத்தில் கேட்டிருக்கிறார் என்றும் அபிராமியின் காம வசனங்களை அள்ளிவிட்டார் தர்ஷன். இப்படி முகெனின் உணர்வுகளை தூண்டும் வகையிலேயே பேசியிருக்கிறார் அபிராமி.
4 மாதங்கள் பாய் ஃபிரன்டுடன்
ஏற்கனவே இளைஞர் ஒருவருடன் அபிராமி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று இருக்கும் நெருக்கமான போட்டோக்கள் வைரலானது. அதுமட்டுமின்றி காதலுக்காக தனது தாயை பிரிந்து நான்கு மாதங்கள் தனது பாய் ஃபிரன்டுடன் தங்கியிருந்ததாகவும் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார் அபி.
பார்வையாளர்கள் அதிர்ச்சி
அபியின் கேரக்டரை தவறாக கூறி அவருடன் பழகிய பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் முகெனிடம் அபிராமி பேசியதாக வெளியாகும் பேச்சுகள் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.