Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
உலக நாயகனின் குடும்ப பொங்கல்.. சன்டி.வியில் கொண்டாட்டம்
சென்னை : தனது சிறு வயதில் இருந்து தற்போது வரை நடித்து கொண்டு இருப்பவர் கமல்ஹாசன். பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது கலைதாகத்தால் பல வித்தியாசமான படங்களில் நடித்து உள்ளார். பல படங்களில் நடித்து வரும் இவர் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.
மூன்று முறை தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன், டாக்டர், செவாலியர் என பல விருதுகள். இவர் சினிமா மட்டுமல்லாது அரசியல் கட்சியும் தொடங்கியுள்ளார். சினிமாவில் அனைத்து துறைகளிலும் வேலை செய்யும் ஒரு நபர் கலை உலகின் சகலகலா வல்லவன்.
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். பல வருடங்களாக சின்னத்திரையில் கால் பதிக்காதவர். பிக் பாஸ் என்ற ஷோவை தொகுத்து வழங்கி அதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை மூன்று சீசன்களாக தொகுத்து வழங்கினார்.
தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு சன் டிவி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது குடும்பத்தினர் உடன் இணைந்து பொங்கலை கொண்டாடுகிறார். இதனை சன் டிவியே அறிவித்துள்ளது.
இதில் அவரின் அண்ணா சாருஹாசன் மற்றும் அவரின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். மேலும் திரை பிரபலங்கள் பலருடன் இணைந்து கமல்ஹாசன் பொங்கலை கொண்டாட உள்ளார். பொங்கல் அன்று கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப்போகிறது.