Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய டிவி நடிகர் கைது
மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கரண் ஓபராய்(40). அவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் கரண்.
இதையடுத்து அந்த பெண் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் கரண் ஓபராய் மீது புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரணை கைது செய்துள்ளனர்.
பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் ஸ்வாபிமான் சீரியல் மூலம் கரண் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கினார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் இல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார் அவர்.
ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் மாடலான கரண் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர்.