பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய டிவி நடிகர் கைது
மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கரண் ஓபராய்(40). அவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் கரண்.
இதையடுத்து அந்த பெண் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் கரண் ஓபராய் மீது புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரணை கைது செய்துள்ளனர்.
பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் ஸ்வாபிமான் சீரியல் மூலம் கரண் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கினார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் இல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார் அவர்.
ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் மாடலான கரண் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர்.


Click it and Unblock the Notifications











