Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய டிவி நடிகர் கைது
மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கரண் ஓபராய்(40). அவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் கரண்.
இதையடுத்து அந்த பெண் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் கரண் ஓபராய் மீது புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரணை கைது செய்துள்ளனர்.
பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் ஸ்வாபிமான் சீரியல் மூலம் கரண் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கினார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் இல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார் அவர்.
ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் மாடலான கரண் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர்.