Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகாபாரத வசனத்தை பேசி டிக்டாக்.. இணையத்தில் கலக்கும் சகுனி.. லைக்குகளை அள்ளும் பிரனித் பட் !
மும்பை : மகாபாரத வசனத்தை டிக் டாக்கில் பேசி இணையத்தில் பதிவிட்டுள்ளார் பிரனித் பட்.
பொதுவாகவே திரைப்படம் ஆனாலும் சரி. சீரியல்கள் ஆனாலும் சரி அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை பொதுவாக ஹீரோ-ஹீரோயின்கள் போன்ற கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது மக்களின் இயல்பு.
ஆனால் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அதாவது வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை அவர்களின் நடிப்பு எவ்வளவுதான் ஈர்க்கும் வகையாக இருந்தாலும் படங்களையோ அல்லது சீரியல்கள் பார்க்கும் போது அவர்களின் நடிப்பு பார்த்து நாம் அவர்களை திட்டுவது உண்டு.
ரசிகர்கள் திட்டினால் தான் அவர்களின் வெற்றி என்றே சொல்லலாம் . சீரியல்களுக்கும், படங்களுக்கும் இந்த நிலைமை என்றால் இதிகாச தொடர்களில் வரும் வில்லன்களை பற்றி யோசித்துப் பாருங்கள். ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு சவால்கள் அதிகம் என்றும் சொல்லலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதத்தில் வரும் சகுனி என்ற கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்திருப்பார் பிரனித் பட். மகாபாரதத்தை பார்க்கும் போதெல்லாம் அவரை திட்டாதவர்கள் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு உண்மையிலேயே ஒரு சகுனி தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் அப்படி உள்வாங்கி நடித்திருப்பார். ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டு , சுருட்டை முடியுடன் இருக்கும் அவருடைய உருவத்தைப் பார்க்கும்போதே இவர் வில்லன் தான் என்று சொல்லும் அளவிற்கு சூப்பராக அந்த கேரக்டருக்கு பொருந்தி இருப்பார்.
பொதுவாகவே ஒரு கதாபாத்திரத்தை பார்க்கும்போது நமக்கு ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்திற்கு வரும் உதாரணத்திற்கு பஞ்சபாண்டவர்களில் நாம் நினைக்கும் போது நியாயம், தர்மம் போன்ற முக்கியமான விஷயங்கள் நினைவுக்கு வரும் .
அதுபோல கிருஷ்ணரை நினைத்தால் அமைதியும், நியாயமும் அவர் அருமையான பேச்சும் நம் அனைவருக்கும் புல்லரிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில் நாம் சகுனி என்று எடுத்துக் கொண்டால் பழிவாங்குதல், துரோகம் தான் நம் நினைவுக்கு வரும்.
கிருஷ்ணர் வரும் காட்சியோ அல்லது பஞ்சபாண்டவர்கள் காட்சி டிவியில் ஒளிபரப்பாகும் போது கிடைக்கும் டிஆர்பியை விட சகுனி வரும் போது வரும் டிஆர்பி அதிகம் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் நடிப்பு அனைவர் மனதையும் ஈர்த்திருக்கிறது.
இன்றும் சகுனி என்று சொன்னால் பிரனீத் பட் மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வருகிறது. அவர் பேசும் வசனங்கள் ராஜ உடைகள் அனைத்தும் அணிந்து கொண்டு பேசுவதை நாம் அறிவோம். ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் அவர் வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் பல பல டிக் டாக்குகள் செய்து வருகிறார்.
அந்த டிக் டாக்கில் மகாபாரதத்தில் வரும் பல டயலாக்குகளை சகுனி கேரக்டர் எப்படி இருக்குமோ அதே போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்தான் அதில் அவர்களுடைய ராஜ உடையுடன் இருப்பார். இந்த வீடியோக்களில் அவர் கேஷுவல் உடையில் இருக்கிறார்.
சாயிஷாவின் கிளாசிக்கல் நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !
தனது வீட்டில் பல பல வித்யாசமான டிக் டாக் செய்து அதனை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். மகாபாரதத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் அவர் வீட்டில் இருந்தபடியே டயலாக்குகளை பேசி பேசி பார்க்கிறார்.
அவர் பேசும் விதம் அனைவரையும் ஈர்க்கிறது.ரசிகர்கள் அவரது டிக் டாக்கிற்கு பல நல்ல கமெண்ட்ஸ் தருகின்றனர் . டயலாக்கை பேசி விட்டு அவர் சிரிப்பதை பார்த்தால் அப்பா இது உலக மகா நடிப்புடா சாமி என்றே சொல்ல தோன்றுகிறது.சகுனியா இது என்று பல தமிழ் ரசிகர்களும் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.