Don't Miss!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- News சிறைக்குள் "பலே பிளான் போட்டு" மாம்பழங்களை அதிகம் சாப்பிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Senthoorappoove Serial: செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... ரஞ்சித் பூ கிடைச்சுதா?
சென்னை: விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்று ஒரு சீரியலை அந்த டிவி புதிதாக ஒளிபரப்ப இருக்கிறது. மிக விரைவில்னு போட்டு ப்ரோமோ போட்டு வருகிறார்கள். இதில் நடிகர் ரஞ்சித் நடித்து இருக்கார். நாயகி செந்தூரப்பூ வேண்டும் என்று கேட்க, நாயகன் செந்தூரப்பூவைத் தேடிப் போகிறார்.
சிந்து நதி பூ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். இவர் நடிகர் மம்முட்டியுடன் நடித்த மறுமலர்ச்சி படம் ரஞ்சித்துக்கு நல்ல புகழைத் தேடித் தந்தது. சின்ன கலைவாணர் விவேக்குடன் இவர் நடித்த பசுபதி மே/பா ராசக்கா பாளையம் படத்தின் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.
பசுபதி மே/பா ராசக்கா பாளையம் படத்தில் பசுபதியாக நடித்து இருக்கும் ரஞ்சித்தின் அம்மா உருண்டை சாதம் பிடித்து தருவார். இதை விவேக் உட்பட அனைவரும் சாப்பிட முடியாமல் திணற ரஞ்சித் மிக அழகாக சாப்பிட்டு முடிப்பார்.இப்படி படங்களில் நடித்து அனைவர் மனதிலும் இடம்பெற்ற ரஞ்சித், இப்போது விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியல் மூலம் சின்னத் திரைக்கு வர இருக்கிறார்.
செந்தூரப்பூவே இருக்குதா?
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்கிற இனிமையான பாடலுக்கு இளையராஜா இசை அமைத்து இருக்க, கங்கை அமரன் பாடல் எழுதி இருப்பார். செந்தூரப்பூவே என்று ஒரு பூவே இல்லை, இது கற்பனைப் பூ என்றும் பின்னர் விளக்கமும் அளித்து இருந்தார் கங்கை அமரன். ஆனால், இந்த பெயரில் நிரோஷா, ராம்கி நடிச்சு இருக்க செந்தூரப்பூவே என்று ஒரு படமும் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படி இந்த கற்பனையான பூவின் பெயரில் விஜய் டிவியில் சீரியல் ஒன்றும் ஒளிபரப்பாக உள்ளது.
Eeramana Rojaave Serial: கால் ஸ்லிப்பாகி கன்னத்துல லிப் ஆயிருச்சாமே... அப்டீன்னா?
அந்நியன் ரெமோ மாதிரி
செந்தூரப்பூவே சீரியலின் நாயகனாக ரஞ்சித் நடித்து இருக்க, நாயகியாக கலர்ஸ் தமிழ் டிவியின் தறி சீரியலில் அன்னம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிச்சு இருக்கார். இவர் ரஞ்சித்திடம் செந்தூர பூ வேண்டும் என்று கேட்க, ஊரெல்லாம் செந்தூரப்பூவைத் தேடி அலையும் ரஞ்சித்துக்கு ஒரு பெண்மணி செந்தூரப்பூ என்பது கற்பனைப் பூ என்று சொல்றாங்க.பூ கிடைக்காமல் வீட்டுக்கு வரும் ரஞ்சித்திடம் செந்தூரப்பூ கிடைச்சுதா என்று கேட்க, செந்தூரப்பூ கிடைக்கலை. ஆனால், வேற பூ கிடைச்சுது என்று கூறும் ரஞ்சித், அவரை அழைத்து வந்து கதவைத் திறக்க, அந்நியன் படத்தில் ரேமோ நந்தினிக்கு பூ பரிசு கொடுத்த மாதிரி ஒரே பூத்தோட்டம்.
போட்டா போட்டியில் சானல்கள்
ஜீ தமிழ் டிவி வயதானாலும் காதல் வரும் என்கிற கான்செப்டில் தூய துறையிலும் காதல் வருமே என்று நீதானே என் பொன் வசந்தம் என்று ஒரு சீரியலை ஒளிபரப்ப உள்ளது. அதன் ப்ரோமோ வெளியாகி வரும் இந்த நேரத்தில் விஜய் டிவியும் காதலிக்க வயதில்லை, காதலுக்கும் வயதில்லை என்று இதே கான்செப்டை கையில் எடுத்து, நடிகர் ரஞ்சித்தை நடுத்தர வயதுக்குள்ளான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வச்சு, இளம் நாயகியாக ஸ்ரீநிதியை நடிக்க வச்சு இருக்கிறார்கள். இப்படி ஒரே கான்செப்டில் சீரியல்களை ஷூட் செய்து ஒளிபரப்ப விஜய், ஜீ தமிழ் டிவி சானல்கள் போட்டா போட்டியில் இருக்கின்றன.
சானல்களில் அதிகரிப்பு
சன் டிவி எப்போதுமே சீரியல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. இது சன் டிவியில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கம். விஜய் டிவி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பல ஆண்டுகளாக சீரியல்களை ஒளிபரப்பி வந்தது. ஜீ தமிழ் டிவி கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒரு சில சீரியலை ஒளிபரப்பி வந்தது. இப்போது அனைத்து சானல்களுமே சீரியல்களை ஒளிபரப்பும் நேரத்தை அதிகரித்து வருகின்றன.