Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மரியாதை தானா கிடைக்கனும்.. பிச்சை எடுக்காதீங்க.. முன்னாள் கணவருக்காக மோகன் வைத்யாவை விளாசிய நடிகை!
Recommended Video
சென்னை: மரியாதையை பிச்சை எடுக்காதீர்கள் என சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோரை சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் விளாசியுள்ளார்.
சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆரம்பத்தில் பொதுவாக கருத்து கூறிய அவர், தற்போது சாண்டி மற்றும் கவின் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் நல்லவர்கள் என்பது போல் டிவிட்டி வருகிறார்.
இதற்காக சேரனையும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களையும் கடுமையாக சாடி வருகிறார் காஜல். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு குறித்து டிவிட்டரில் காஜல் கருத்து தெரிவித்துள்ளார்.
கமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா
ருத்ரதாண்டவம்
நேற்றைய எபிசோடில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத லாஸ்லியா விருதை வாங்கி தூக்கி எறிந்த கையோடு, ருத்ரதாண்டவம் ஆடினார்.
மரியாதையா பேசு
சரி திமிராக பேசியதோடு ஆட்டிட்யூட் காட்டினார். ஒரு கட்டத்தில் மோகன் வைத்யாவின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் ஹலோ.. என்று அழைத்து தரக்குறைவாக நடந்து கொண்டார். இதனால் மரியாதையாக பேசு என மோகன் வைத்யா கூறினார்.
லாஸ்லியா பேசியது சரிதான்
அப்படிதான் பேசுவேன் என்ற லாஸ்லியா உங்களுக்கு நீங்கள் மரியாதையாக பேசிக்கொள்ளுங்கள் என தெனாவட்டாக பதிலளித்தார். இந்நிலையில் லாஸ்லியா பேசியது சரிதான் என டிவிட்டியிருக்கிறார் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல். அதோடு மோகன் வைத்யா மற்றும் சாக்ஷியையும் கடுமையாக விளாசியிருக்கிறார் அவர்.
|
பிச்சை எடுக்காதீங்க
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, நிச்சயமாக.. நடுவர்களா இருக்க ஒரு தகுதி வேணும், அது இவங்களுக்கு கண்டிப்பா இல்ல. தகுதி இருந்தாதான் மரியாதை பண்ண முடியும். மரியாதை கோரவும் முடியாது, பிச்சை எடுக்கவும் கூடாது. அது தானா கிடைக்னும். இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் நடிகை காஜல்.