twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலிப்பதாக ஏமாற்றிய கவினுக்கு ஸ்பெஷல் தண்டனை கொடுத்த கஸ்தூரி! என்னன்னு பாருங்க!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Promo 1 :Day:47 : Kasthuri-யிடம் மாட்டி தவிக்கும் Kavin- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய கவினுக்கு வைல்டு கார்டு என்ட்ரியான கஸ்தூரி ஸ்பெஷல் தண்டனை ஒன்றை கொடுத்தார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எதிர்பாராத விதமாக சரவணனை பிக்பாஸ் வெளியேற்றிவிட்டார். அதே நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷனும் உள்ளது.

    இதனால் பிக்பாஸ் வீட்டின் ஸ்ட்ரென்த்தை அதிகரிக்க நேற்று நடிகை கஸ்தூரியை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பினார் பிக்பாஸ். உள்ளே வந்த கஸ்தூரி 45 நாட்கள் நிகழ்ச்சியை பார்த்து யார் யார் எப்படி என்ற கணக்கோடு வந்திருப்பதால் வந்த வேகத்திற்கு எல்லோரையும் இக்கு வைத்து பேசி மிரள விட்டார்.

    ஆனா வேற மாதிரி

    ஆனா வேற மாதிரி

    இதைத்தொடர்ந்து இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை என்பதை கஸ்தூரி மூலமாக அறிவித்தார் பிக்பாஸ். ஆனால் அதற்கு பதிலாக கஸ்தூரி, அவர் விரும்புபவருக்கு தண்டனை கொடுக்கலாம் அதற்கான ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாயாலேயே அறிவிக்க செய்தார்.

    சாக்ஷிக்கு புரியும்

    சாக்ஷிக்கு புரியும்

    இதைத்தொடர்ந்து கஸ்தூரி ஹவுஸ்மேட்களில் சிலருக்கு தண்டனை வழங்கினார். அதன்படி சாக்ஷியை தலைகீழாக நிற்குமாறு தண்டனை கொடுத்த அவர், இதற்கான அர்த்தம் சாக்ஷிக்கு புரியும் என்றார் சூசகமாக.

    குடை பிடித்த மதுமிதா

    குடை பிடித்த மதுமிதா

    இதைத்தொடர்ந்து தர்ஷனுக்கு நிழலாக இருக்க வேண்டும் என்றும் அவருக்கு குடை பிடிக்க வேண்டும் என்றும் மதுமிதாவுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தார் கஸ்தூரி. இந்த பனீஷ்மென்ட்டை இருவருமே விளையாட்டுத்தனமாகவே எடுத்துக்கொண்டனர். குறிப்பாக மதுமிதா, தர்ஷனுக்காக எக்கி எக்கி குடை பிடித்து தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தார்.

    வித்தியாசமான தண்டனை

    வித்தியாசமான தண்டனை

    இதேபோல் ஷெரினுக்கு சொல்லும் இடத்தில் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தண்டனை கொடுத்தார். அடுத்தபடியாக கவினுக்கு கொடுத்த தண்டனை சற்று வித்தியாசமானது.

    மூக்கால் எழுதவைத்து

    மூக்கால் எழுதவைத்து

    அதாவது கவினை மூக்கால் மன்னித்துவிடு என எழுதும்படி பனீஷ்மென்ட் கொடுத்தார். இந்த தண்டனை கவினுக்கு தான் பொறுந்தும் என்று கூறி அந்த தண்டனையை அவருக்கு வழங்கினார் கஸ்தூரி. கவினும் ஏன் எதற்கு என கேட்காமல் அதனை செய்து முடித்தார்.

    சாக்ஷி பெயர் நாமினேட்

    சாக்ஷி பெயர் நாமினேட்

    கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே பிரேக்கப் ஆன பிறகு, கவின் முதலில் சாக்ஷி பெயரை நாமினேட் செய்தார்.

    ஆணின் குணம்

    அதனை கண்டித்த கஸ்தூரி, இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம். ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டிருந்தார்.

    கஸ்தூரியின் தண்டனை

    கஸ்தூரியின் தண்டனை

    இதனால் கவின் தனது சுய நலத்துக்காக பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதால் அவர் மீது கஸ்தூரியும் கோபத்தில் உள்ளார் என்பது தெளிவானது. இந்நிலையில் கவினை மன்னித்துவிடு என மூக்கால் எழுத வைத்து கஸ்தூரி தண்டனை வழங்கியுள்ளார்.

    English summary
    Actress Kasthuri given Punishment to Kavin to make him write Mannithuvidu by his nose.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X