Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக்பாஸ் கொண்டாட்டம்.. வந்த வேகத்தில் கவினை வாரிய கஸ்தூரி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற கவினை, நடிகை கஸ்தூரி எடுத்த எடுப்பிலேயே அசால்ட்டாக வாரினார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. 16 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவ் டைட்டில் வின்னரானார்.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி இரண்டாம் இடத்தையும் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கால்பந்து வீராங்கனை மனதையும் பெற்றோர்கள் மனதையும் மாற்றறிருக்கும் பிகில்
பிக்பாஸ் கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் மதுமிதா, சரவணன் மற்றும் மீரா மிதுன் ஆகிய மூன்று பேரை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் தொகுத்து வழங்கினார்.
புதிய வாய்ப்புகள்
அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மக்களிடம் என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்றார். அதற்கு பதிலளித்த ஃபாத்திமா பாபு, மோகன், வைத்யா, சேரன் உள்ளிட்டோர், மக்களிடையே நல்ல பிரபலமாகியிருக்கிறோம், புதிய வாய்ப்புகள் வந்துள்ளன என்றனர்.
நிறைய பொறுமை
நடிகை வனிதா நிறைய தம்பி தங்கைகள் கிடைத்திருப்பதாக கூறினார். இதே கேள்விக்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற பிறகு நிறைய பொறுமை வந்துள்ளதாக கூறினார்.
கவினை வாரிய கஸ்தூரி
யார் காக்கா என்று கூறினாலும் கோபம் வருவதில்லை என கூறி கவினை வாரினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர் வைத்து கேவலமாக கிண்டல் செய்தவர் கவின்.
கா.. கா.. என கிண்டல்
சேரனுக்கு சைக்கிள் என்றும் மதுமிதாவை குள்ளச்சி என்றும் பட்டப் பெயர் வைத்து அழைத்தார் கவின். பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கஸ்தூரிக்கு காக்கா என்று பட்டப் பெயர் வைத்த கவின், அவர் பேசும் போதெல்லாம் கா.. கா என கத்தி கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.