Don't Miss!
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பூங்கொடியால் புயல் உருவாகுமா?வாணி ராணியில் அதிரடி திருப்பம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் வாணி ராணி அதிரடி திருப்பங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. அண்ணன் தம்பிக்குள் பிரிவு தனிக்குடிதனம் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில் வாணி ராணியின் அண்ணன் மகள் பூங்கொடியின் மூலம் புதிய புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணியின் மகள் செல்வியின் காதல் திருமணத்தை நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வரும் வாணி அதை எப்படி குடும்பத்திற்கு தெரியாமல் மறைக்கிறாள்? இளைஞர்களின் சண்டை தொடருமா? என்ற கேள்விகளுடன் இனிவரும் எபிசோடுகளை பார்க்கலாம்.
பூமி நாதன் – சாமிநாதன்
சகோதரிகளான வாணி - ராணியை திருமணம் செய்த பூமி நாதன் - சாமிநாதன் இருவரும் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் இல்லை என்ற உண்மையை குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லிவிடுவானா பூமிநாதன்? இதன் மூலம் குடும்பம் உடையுமா?
காத்திருக்கும் காதலர்கள்
ராஜேஸ் - செல்வியின் காதல் திருமணத்தை நிறுத்திய வாணி அவர்கள் இருவரையும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கச் சொல்லிகிறாள். இந்த விவகாரம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்றும் செல்வியிடம் கூறுகிறாள் வாணி. இது தெரியவந்தால் என்னவாகும்?
பூங்கொடியின் வரவு
மனோ -ஜோதி தம்பதியின் மகள் பூங்கொடியாக புதிய பாத்திரத்தில் மகாலட்சுமி அறிமுகமாகிறார். இவர் எதற்கெடுத்தாலும் பந்தையம் கட்டி அதில் ஜெயிக்கத் துடிக்கும் பைங்கிளி. எல்லோரிடமும் சட்டென ஒட்டிக்கொள்ளும் குணம் படைத்தவள்.
புயல் உருவாகுமா?
வாணி - ராணி வீட்டிற்குள் பூங்கொடி அடி எடுத்து வைக்கும் நேரம் புயலே உருவாகிறது. சூர்யா - பூங்கொடி திருமணத்தை நடத்த வேண்டும் என்ற பாட்டி சாந்தி வில்லியம்ஸ் கனவு நனவாகுமா? போன்ற பல கேள்விகளுக்கு எதிர்வரும் எபிசோடுகளில் விடை கிடைக்க உள்ளது.
ராதிகா சரத்குமார்
ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் ராதிகா சரத்குமார், வேணுஅரவிந்த், பப்லு, ரவிக்குமார், ஜோக்கர்துள்சி, ஜோதிரெட்டி, சாந்திவில்லியம்ஸ், வீணா வெங்கடேஷ், அருண், விக்கிசுதீப், நிகிலா ராவ், ராஜ்குமார், பேபி நேஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஓ.என். ரத்னம் இயக்கியுள்ளார்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!