Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சட்னியில் சோப்பு போட்ட ஜென்னி.. உண்மையை கண்டுபிடித்த பாக்கியா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியுடனான மகா சங்கமத்தை முடித்துள்ளது.
கொடைக்கானலில் கோபி -ராதிகா இடையிலான பிரச்சினைகளையும், பாக்கியலட்சு குடும்பத்தினரின் உற்சாகத்தையும் ஒருசேர இயக்குநர் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்கவுள்ளது.
பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..அனைவர் முன்னிலையிலும் தலைகுனிந்து நின்ற பாக்கியா!
ராதிகாவுடன் கோபி திருமணம்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமியில் பாக்கியாவை விவாகரத்து செய்த கையோடு ராதிகாவின் மனதை மாற்றி அவரை திருமணம் செய்துக் கொண்டார் கோபி. இதையடுத்து கொடைக்கானலில் தன்னுடைய ஆசை மனைவியுடன் கொண்டாட்டமாக பொழுதை கழிக்கலாம் என்று நினைத்த அவரது கனவு நிராசையானது.
மகா சங்கமம்
கடந்த சில தினங்களாக பாக்கியலட்சுமி -பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில தினங்களாக இந்த இரு தொடர்களின் நடிகர்களும் கொடைக்கானலில் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆனால் ராதிகாவை திருமணம் செய்த கையோடு கொடைக்கானல் சென்ற கோபியின் பாடு திண்டாட்டமாக மாறியது.
கொண்டாட்டத்தில் பாக்கியா குடும்பத்தினர்
பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் ஒரு பக்கம் கோபியின் திருமணம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து தங்களது மனதை மாற்றிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், கோபி மற்றும் ராதிகாவை படுத்திய பாட்டில் ராதிகாவிடம் தொடர்ந்து உதைபட்டார் கோபி.
கோபி -ராதிகா சண்டை
ராதிகாவின் தொடர் சண்டையால் ஒரு கட்டத்தில் அவரை அடிக்க பாய்ந்தார் கோபி. தொடர்ந்து ரூமை விட்டு வெளியில் வந்த அவர், தன்னுடைய குடும்பத்தினரின் கொண்டாட்டத்தை ஏக்கத்துடன் பார்த்ததையும் ரசிகர்கள் பார்க்க முடிந்தது. இதனிடையே இந்த மகா சங்கமத்தை முடித்துக் கொண்டு தற்போது பாக்கியலட்சுமி குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர்.
திணறிய ஜென்னி
இங்கு ஜென்னி சமைக்க தெரியாமல், ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த டிபனை குடும்பத்தினருக்கு கொடுக்கிறார். இதற்கு துணையாக இருக்கிறார் செழியன். சட்னி ஒருமாதிரியாக இருக்கிறதே இதில் எதையெல்லாம் சேர்த்தாய் என்று ஈஸ்வரி கேட்க வெங்காயம், தக்காளி சேர்த்ததாக கூறுகிறார்.
சட்னியில் சோப்பு
தொடர்ந்து வேறு எதை சேர்த்தாய் என்று கேட்க, பாக்கியலட்சுமி சோம்பு போட்டிருப்பாள் என்று எடுத்து கொடுக்கிறார். ஆனால் அதுகுறித்து தெரியாத ஜென்னி, ஆமாம் பாட்டி சோப்புதான் சேர்த்தேன் என்றுகூற அவர்கள் அனைவரும் முழிக்கின்றனர். இவ்வாறு சோம்பிற்கும் சோப்பிற்கும் வித்தியாசம் தெரியாத ஜென்னியின் பேச்சு அனைவரையும் முழிக்க செய்வதாக ப்ரமோ வெளியாகியுள்ளது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்