நான் வேண்டுமென்றே செய்யவில்லை: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா
Recommended Video

சென்னை: பிக்பாஸில் நடந்த சம்பவங்களுக்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக நடைபெற்றுவந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டைட்டில் வின்னராக தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது என சிலாகிக்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாமிடம் பிடித்தார்.
ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக சர்வாதிகாரி டாஸ்க்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கு ரசிகர்கள் கொந்தளித்தனர்.
அதற்காக நிகழ்ச்சியிலேயே வருத்தம் தெரிவித்திருந்தாலும், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்யா.
வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்றும் அதனால் பிக்பாஸ் போட்டியாளர்களிடமும், சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











