Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சக போட்டியாளரிடம் ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா #BiggBoss2Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் ஒருவரிடம் ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்தார் ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் வீட்டில் வெங்காயத்தால் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு ஐஸ்வர்யா தத்தா அணியும் உடைகள் பற்றி ஹவுஸ் கேப்டனான ஜனனி ஐயர் குறை கூறினார்.
ஜனனி பேசிய விதம் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஐஸ்வர்யா
நான் எந்த உடை அணிந்தாலும் கமெண்ட் பண்றீங்க. அது தெரியுது, இது தெரியுதுன்னு நீங்கள் சொல்வது எனக்கு பிடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா ஜனனியிடம் கூறினார்.
அதிர்ச்சி
ஐஸ்வர்யா இப்படி படக்கென்று கேட்பார் என்று எதிர்பார்க்காத ஜனனி அதிர்ச்சி அடைந்தார். உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டில் உள்ள பையன் என்னிடம் வந்து சொன்னதை தான் உங்களிடம் கூறினேன் என்று சமாளித்தார் ஜனனி. அந்த பையன் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் அவர்.
மோதல்
நீங்கள் கூட தான் ஜம்ப் சூட் போட்டபோது தெரிந்தது, நான் ஏதாவது கூறினேனா என்று ஐஸ்வர்யா ஜனனிக்கு பதிலடி கொடுத்தார். இதை கேட்ட ஜனனி சொல்ல வேண்டியது தானே என்று கூறி அழத் துவங்கிவிட்டார்.
முத்தம்
ஜனனி அழுது முடித்துவிட்டு மேக்கப் போட்டபோது அறைக்குள் வந்த ஐஸ்வர்யா அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன் ஒரு ஐ லவ் யூ வேறு சொல்லி கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுத்துவிட்டார். ஆக பரபரப்பாகும் என்று நினைத்து தூண்டிவிட்ட விஷயம் சப்பென்று முடிந்துவிட்டது.