Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னா ஆட்டம்.. எல்லாம் முடிஞ்சுதா?.. ஐஸ்வர்யாவை அடக்கி முடக்கிய பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது இன்றைய புரோமோ மூலம் தெரிகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கியது.
வீட்டிற்கு வந்த 16 போட்டியாளர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டு இப்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பாத்ரூமை பயன்படுத்துவதற்கும், டீ குடிப்பதற்குமா டாஸ்க் வைப்பீர்கள் என்று ஒருபக்கம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சர்வாதிகார ஆட்சி என்ற லக்சூரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மற்றும் தற்போது ரிலீஸாக உள்ள மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டின் ராணியாக நியமிக்கப்பட்டார்.
ராணி என்றதுமே அவரின் ஆட்டம் ஆரம்பமானது, பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடிக்காதவர்களை கடுமையாக கொடுமைப்படுத்தினார். ரித்விகாவை சீண்டியது, பாலாஜி மீது குப்பை கொட்டியது என ஐஸ்வர்யாவின் ஆட்டம் எல்லை மீறியது.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவில், ஐஸ்வர்யாவின் அராஜகங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. வைஷ்ணவி சீக்ரட் ரூமிற்குள் இருந்து வெளியே வருகிறார். எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் யார் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை வரிசைப்படுத்தி நிற்க வைக்க வேண்டும் என படித்துவிட்டு டேனியை தனியே நிற்கச் சொல்கிறார்.
டேனி நேர்மையானவர்கள் வரிசையில் முதலில் உள்ளாரா அல்லது கடைசியில் உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.