Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Nayagi serial: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொல்ல முடியலையே!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஒரு பொண்ணுக்கு நடக்க கூடாத கொடுமை எல்லாம் நடக்குது.
என் புருஷன்தான்னு நிரூபிக்க எத்தனை போராட்டம். மத்தவங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால்,கட்டின புருஷன்கிட்ட நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.
வயித்துல புருஷனோட குழந்தையை சுமப்பதை கூட சொல்லி சந்தோஷப்பட முடியலை. மொத்தத்தில் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கத் தயாராக இருக்கும் புருஷனை என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொந்தம் கொண்டாட முடியலை.
Arundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ!
திருமுருகன் ஆனந்தி
ஆனந்தி திருமுருகன் இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டாங்க. கல்யாணத்தை கெடுக்க திருமுருகன் அப்பா கலிவரதன் என்னென்னெவோ செய்தும் கல்யாணம் நடந்துருச்சு. அதே மாதிரி முதலிரவு நடக்க கூடாதுன்னு சதி செய்தும் முதலிரவு நடந்துருது. காரணம் இவங்க ரெண்டு பேருக்கும் பிறக்கப் போற குழந்தையால் கலிவரதன் உயிருக்கு ஆபத்தாம்.
அடிபட்டு நினைவுகள்
திருமுருகனுக்கு மண்டையில் அடிபட்டு,கடந்த ஐந்து வருட கால நினைவுகள் அழிஞ்சு போயிருது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகிட்ட கலிவரதன் துரை அரசன் பொண்ணு அனன்யாவை மீண்டும் திருவுக்கு கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்குது. அவனுக்கு நினைவு வர வேண்டிய மாத்திரை,சித்த மருந்து குளிகைன்னு எதை எதையோ மாத்தி வச்சு ஆனந்தியைப் போராட வைக்கறாங்க.
சதிகளை முறியடிச்சு
எல்லாவற்றையும் முறியடிச்சு ஆனந்தி திருவை மாத்திரை குளிகைகளை சாப்பிட வச்சுடறா. அவனுக்கும் நினைவு வந்து இந்த கல்யாணம் நின்னுரும்னு காத்திருக்காங்க. இன்னும் அவனுக்கு நினைவு திரும்பிய பாடில்லை. கடைசியில் அனன்யாவுக்கும், திருவுக்கும் கல்யாணம் நாளைக்கு நடக்கப்போகுது. திருவை வச்சுக்கிட்டே, உன் கழுத்தில் தாலி தொங்குதே அதுக்கு உரிமையானவன் யாருன்னு கேட்கறா. உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு யாரு அப்பான்னு கேட்கறா.
என் புருஷன்தான்
திருதான் என் புருஷன்... என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்கதான் திரு அப்பான்னு சொல்ல முடியுமா தவிக்கறா ஆனந்தி. சொன்னால் அவன் உயிருக்கு ஆபத்தா முடியுமாம்.. என்னங்க மாத்திரை சாப்பிட்டும் ஆறு மாசம் முடிஞ்சு போச்சு..குளிகையும் சாப்டாச்சு .மூளை பலமடைஞ்சு இருக்காது?