‘கேபிசி’ நிகழ்ச்சிக்காக ரூ.140 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன்!

புகழ் பெற்ற ' கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த அமிதாப் பச்சன் தன்னுடைய தனித்திறமையை இந்த நிகழ்ச்சியில் நிரூபித்தார். இதன் முதல் இந்த நிகழ்ச்சிக்கான டி ஆர்.பி ரேட்டிங் எகிறியது.தற்போது கே.பி.சி சீசன் 6 தொடங்கியுள்ளது. இதனையும் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 140 கோடி ரூபாயாம். சோனி டி.வி தான் இந்தளவிற்கு சம்பளத்தை கொட்டிக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் இந்திய நடிகர்களிலேயே சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சிக்காக அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையை 'பிக் பி' அமிதாப் பச்சன் பெற்றுள்ளார்.
தற்போது ஸ்டார் ப்ளஸ் டிவியில் அமீர்கான் தொகுத்து வழங்கும் 'சத்ய மேவ ஜெயதே' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது டிஆர்பி ரேட்டிங் கணக்கெடுப்பின் படி 3 வது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் கோன் பனேகா குரோர்பதி அனைத்து நிகழ்ச்சிகளையும் முந்திக்கொண்டு முன்னணியில் உள்ளதாக டிஆர்பி கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











