Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Aranmanai kili serial: வாசுகி பாம்புக்கு அஞ்சு தலையாமே... பார்த்துடலாம்!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுனின் காலை சரி செய்து அவனை நடக்க வைக்க அஞ்சு தலை பாம்பு வரப்போகுதாம். அதன் பேரு வாசுகி என்று சொல்கிறார்கள்.
காடு, மேடு,மலை என்று சுத்தி வந்த ஜானு,இப்போது புருஷன் அர்ஜுனுக்கான கடைசி கட்ட வைத்திய முறை, பூஜை புனஸ்காரம், விரதத்துக்கு தயாராகிட்டா. நாக தேவர்கள் வாழும் இடத்துக்கு போயி, வாசுகி பாம்புக்கும் பூஜை செய்தாச்சு.
இப்போது நாளை நடக்க இருக்கும் அக்னி குண்ட பூஜைக்கு தீச்சட்டி ஏந்தி, அதை அக்னி குண்டத்தில் போட்டுட்டா அஞ்சு தலை வாசுகி பாம்பு வந்து, அர்ஜுனின் காலை தீண்டி, அவன் எழுந்து நடந்து விடுவானாம்.
துர்கா சதி
எப்படியாவது இந்த அக்னி குண்ட பூஜையை ஜானுவை செய்ய விடாமல் தடுத்து, அர்ஜுனை நடக்க விட கூடாது என்று துர்கா திட்டம் போடுகிறாள். இதைப் பற்றி புலம்பிக் கொண்டு இறுக்கும் மீனாட்சி அம்மாவிடம் சித்தி எப்படியாவது இந்த பூஜையை தடுத்து நிறுத்தணும் சித்தி.அதுக்கு நீங்க சும்மா ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிங்க அர்ஜுன் உடனே பூஜை வேணாம்னு சொல்லிட்டு வந்துருவான்னு சொல்றா.
உன் புத்தி ஏன்?
உன் புத்தி ஏன் துர்கா இப்படி வேலை செய்யுது. ரொம்ப கீழ்த் தரமா யோசிக்கறே. ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நான் நடிக்கணுமா? நான் எப்படி துர்கா இதுக்கு ஒத்துக்குவேன்னு நினைக்கறே? என்னால முடியாது துர்கா...இனிமே இது மாதிரி யோசனை எல்லாம் எனக்கு சொல்லாதேன்னுட்டு போயிடறாங்க.
மயக்க மருந்து
துர்கா ஆஸ்ரமத்தில் இருப்பவருடன் பேசி, மீனாட்சி அம்மாவுக்கு மயக்கம் வந்து மூச்சு திணறுவது மாதிரியான மருந்தை ஏற்பாடு செய்து எடுத்துக்கிட்டு வர்றா. அதை மீனாட்சி அம்மாவுக்கு கொடுக்கும் காபியில் கலந்து கொடுத்து, இந்தாங்க சித்தி காபின்னு தர்றா. அவங்களும் குடிக்கப் போக, அதற்குள் அர்ஜுனைப் பத்தி பேசறாங்க. சீக்கிரம் குடிக்க மாட்டேங்கறாளேன்னு துர்கா மனதுக்குள் நினைக்க, காலிங் பெல் சத்தம்.
ஜானு வருகிறாள்
துர்கா எழுந்து போயி கதவைத் திறக்க ,அங்கு ஜானு நிற்கிறாள். இவள் ஒதுங்கிக்க, உள்ளே வருகிறாள் ஜானு.மீனாட்சி அம்மாவைப் பார்த்து ,அம்மா நாளைக்கு அர்ஜுன் சாருக்காக நாளைக்கு விரதம் இருந்து அக்னி சட்டி ஏந்த போறேன், அதை ஹோம குண்டத்தில் சேர்த்துட்டா, வாசுகி பாம்பு வந்து அர்ஜுன் சார் காலைத் தீண்டி அவரை நடக்க வச்சுடும்மா. நான் நல்லபடியா இதை செய்ய என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கன்னு ஜானு பேச கடுப்பான மீண்டச்சி அம்மா காபியைத் தூக்கி வீசிடறாங்க.
எத்தனை பால் போட்டாலும் இந்த ஜானு சிக்ஸர் அடிச்சுடறாளேன்னு,அடுத்த பிளானான தீச்சட்டியில் வெடிகுண்டு மருந்து வைப்பதை பற்றி யோசிக்க ஆரம்பிக்கறா துர்கா.