twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Aranmanai kili Serial: என்னாது... நாகலிங்க பூவில் பூ நாகம் இருக்குமா?

    |

    சென்னை: விஜய் டிவியின் அரண்மனைக் கிளி சீரியலில் மிகமிக பணக்கார மீனாட்சி அம்மாவின் மகன் அர்ஜுனுக்கு ஒரு விபத்து நடந்துருது.

    அந்த விபத்தில் அர்ஜுனுக்கு முதுகுத்த தண்டு வடத்தில் அடிப்பட்டு நடக்க முடியாமல் போகிறது. எப்போதும் வீல் சேர்தான்.

    அர்ஜுனை படிக்கும்போது காதலித்த சொந்தகார பெண் ஒருத்தி , காலில்லாத இவனை எப்படி ஆன்ட்டி நான் கல்யாணம் செய்துப்பேன்னு இன்னும் நம்பிகிட்டு வந்து கல்யாணம் பேச வர்றீங்கன்னு கேட்டுடறா.

    Nayagi Serial:திருவுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! ஆனந்தியா, அனன்யாவா? Nayagi Serial:திருவுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! ஆனந்தியா, அனன்யாவா?

    பணம் இருந்தால்

    பணம் இருந்தால்

    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று, மனதில் இருக்கும் குறை எல்லாம் எனக்கு குறையாகத் தெரியவில்லை கண்ணா என்று மனம் உருகிப் பாடுவது. ஆனால், மீனாட்சி அம்மாவின் மகன் நடக்கவில்லை, பொண்ணு வேணாம்னு சொன்னதும கோபம் மாட்டும் பொத்துக்கிட்டு வருது. உடனே தன் வீட்டில் ரொம்பவருஷமா வேலை பார்க்கும் வேலையாளின் முதல் பெண்ணை கல்யாணம் பேசி முடிக்கறாங்க.

    ரெண்டாவது ஜானு

    ரெண்டாவது ஜானு

    முதல் பெண் ரேணுகாவை மீனாட்சி அம்மாவின் மகனுக்கு பேசி முடிக்க, மீனாட்சியின் அக்கா மகள் துர்கா அர்ச்சனாவிடம், அர்ஜுனைப்பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கல்யாணத்தை விட்டு ஓடிப்போக செய்துட்டா, அடுத்து மாட்டினவள்தான் ஜானகி. ஜானகி படிக்காதவளாம்..மீனாட்சி அம்மாவுக்கு பிடிக்கலை. முதலில் அர்ஜூனுக்கும் பிடிக்கலை. அதனால, டைவர்ஸ் பண்ணிடலாம்னு முடிவில் இருக்காங்க.

    ஜானு படிக்காதவள்

    ஜானு படிக்காதவள்

    ஆமாம் பணம் இருந்தால் கால் நடக்க முடியாமல் போனாலும் குறை குறை இல்லையா... இப்போ ஜானு படிக்காதவள் என்பது மட்டும்தான் உங்க கண்ணுக்கு குறையா படுதா? நல்லா சமைக்கறா... அர்ஜுனை நல்லா பார்த்துக்கறா, வீட்டை வேலைக்காரி போல கவனிச்சுக்கறா. இவ்வளவு ஏன், மன நிலை சரியில்லாத துர்கா அம்மாவையே குணமாக்கிடறா. இருந்தாலும் ஜானுவை யாருக்கும் பிடிக்கலை. அர்ஜுன் மட்டும் தன்னை டைவர்ஸ் பண்ணிட்டு போனா அவ வாழ்க்கை நல்லா இருக்கும்னு நல்ல எண்ணத்தோடு நினைக்கிறான்.

    சரியாக வைத்தியம்

    சரியாக வைத்தியம்

    அர்ஜுன் கால் சரியாக வேண்டும் என்று ஒரு வைத்திய சாலைக்கு ஊருக்கு போறோம்னு பொய் சொல்லிட்டு போறாங்க. அங்கே வைத்தியம் நடந்துகிட்டு இருக்கும் போது கெட்டவள் துர்கா போன் நம்பரை டிராக் செய்து வந்துடறா.அர்ஜுன் நடக்கவே கூடாது, எப்போதும் வீல் சேரில்தான் இருக்கணும்.போகும் போது ஜானு கூட வரக்கூடாதுன்னு மனசுல நினைச்சுகிட்டு, அங்குள்ள ஆட்களை பிடிச்சு அதற்கான வேலையைப் பார்க்கறா.

    பூ நாகம்

    பூ நாகம்

    நாகலிங்க பூவில் பூ நாகம் இருக்கும். அதை பறிச்சுக்கிட்டு வந்து மருந்தாய் வச்சு பூஜை செய்தால், அந்த கூடையைத் தூக்கும் போது பூ நாகம் ஜானுவை கொத்தி, உயிரிழக்க நேரிடலாம்னு ஒருத்தன் கதை சொல்றான். ஒரு பூ நாகத்தை பிடிச்சுட்டு வந்து நாகலிங்கப் பூவில் வைத்து மூடறாங்க.இவங்க எதிர்பார்த்தபடியே அந்த பூ நாகம் ஜானுவை கொத்திடுது. ஆஸ்ரமத்துல வைத்தியர் மருந்து குடுக்கறார்.அந்த மருந்து எழுந்துக்கத்தான் வேலை செய்யுமாம்..பழையபடி ஜானுவால சுறுசுறுப்பா இருக்க முடியாதாம்.

    English summary
    Arjun, son of a very wealthy Meenakshi mother, has been involved in an accident at Vijay TV's aranmanai kilai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X