twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு!

    |

    சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிகர் ஆர்.ஜெ செந்தில்தான் ஹைலைட்.

    அண்ணன் தம்பின்னு ரெட்டை வேஷத்துல நடிக்கறார்செந்தில்.ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார்

    மதுரை பாஷை ரொம்ப நல்லா பேசறார். மாயனுக்கு மதுரை பாஷை, டாக்டர் அரவிந்த் கெத்து..நல்லா நடிப்புல வித்தியாசம் காமிக்கறார்.

    அறுபதாம் கல்யாணம்

    அறுபதாம் கல்யாணம்

    மாயனை வளர்த்த அம்மாதான் அரவிந்தையும் பெத்த அம்மா.ஆனா, அரவிந்த் வேற அம்மாகிட்ட வளர்றான். மாயனையும் தன்னையும் பெத்த அப்பாஅம்மாவுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படறான் அரவிந்த்.

    கல்யாணப்பொண்ணு செல்வி

    கல்யாணப்பொண்ணு செல்வி

    மாயனுக்கு போன் வருது ..அட கல்யாண பொண்ணு செல்வின்னு சொல்லி போனை எடுக்கறான். சொல்லு செல்வி எல்லாம் ரெடிதானே... வந்துடுவேன்...உன்னோட மொத கல்யாணத்துக்கு மட்டும் நான் இருந்தேன்..உன் ஹைட்டுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து இருப்பேன். இப்போப் பாரு ரெண்டாவது தடவையும் அந்த மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்க போறேன்னு காமெடியா அப்பா அம்மா அறுபதாம் கல்யாணத்தை சொல்றான் இந்த இடத்தில் மாயனின் நடிப்பு ரசிக்கும்படியா இருக்கு.

    மல்லிப்பூ தாமரைக்கு

    மல்லிப்பூ தாமரைக்கு

    அறுபதாம் கல்யாணத்துக்கு அரவிந்தின் மனைவி தாமரை கிளம்பி வர்றா. பொண்டாட்டியை ஆசையா பார்க்கறான்...அழகின்னு கூப்பிடறான். தாமரை வெட்கப்பட்டு நிக்க, அழகா இருக்கேன்னு சொல்றான்.தாமரைமீண்டும் வெட்கப்பட்டு நிற்க..கையை பிடிக்கறான்.

    நான் புடவை

    நான் புடவை

    புடவை மேல கை வைக்க..அவள் ஐயயோன்னு பதட்டம் ஆகறா. என்னாச்சு நான் தொடக் கூடாதான்னு கேட்கறான்.. இல்லை புடவைன்னு இழுக்கறா...நீ எப்பவும் சரோஜா தேவி மாதிரிதானே புடவை கட்டுவே..இப்போ என்ன இப்படின்னு கேட்கறான். இரு நான் கட்டிவிடறேன்னு சொல்றான்.

    வேணாம்ங்க...

    வேணாம்ங்க...

    வேணாம்ங்கன்னு தாமரை சொல்ல சும்மாநின்னா முந்தானையை மட்டும் சரி பண்ணுவேன்..எதாவது பேசினே...மொத்த புடவையையும் கழட்டிட்டு கட்டிவிடுவேன்னு சொல்ல, சரின்னு சொல்லி நிக்கறா...அவன் கட்டிவிடறான்.

    நான் வச்சுவிடறேன்

    நான் வச்சுவிடறேன்

    சரிங்க..இந்த பூவை அண்ணிகிட்ட போயி வச்சுக்கிட்டு வரேன்னு சொல்றா. நான் வச்சுவிடறேன் பேரழகியே.. உலக அழகின்னு சொல்லி.அவளைத் தொட்டு திருப்பி விடறான். இப்போ புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது சாங்.. அழகா பூ வச்சுட்டு தன் பக்கம் அவளைத் திருப்பி விட்டு ,என் மைசூர் பாக்கு இப்போ எவ்ளோ அழகாயிருக்கே தெரியுமான்னு கேட்கறான்.

    அழகி செல்ஃபி

    அழகி செல்ஃபி

    அழகி ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்துக்கலாமான்னு கேட்கறான்.. அவள் தலையாட்ட அவள் தோளில் கை வைத்து அணைச்சுக்கிட்டு செல்ஃபி எடுக்கறான். அவள் அவனை ஆசையா பார்க்கறா.. இப்போது மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாடல்

    நால்லாத்தான் இருக்கு..பாட்டு போட்டுக்கிட்டு லவ் பண்றது...

    English summary
    Vijay TV's tnaam iruvar namakku iruvar of us serial actor RJ Sethil Highlight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X