பிக் பாஸ் மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ? #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போன்று விறுவிறுப்பாக இல்லை. ரொம்ப மொக்கையாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றாலே கடுப்பு தான் வருகிறது என்று சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு விளாசுகிறார்கள்.
போட்டியாளர்கள் செய்வதும், சொல்வதும் எடுபடவில்லை.

ரசிகர்கள்
முதல் சீசனில் பிக் பாஸ் வீட்டில் நடந்ததை பார்த்து ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்பது தற்போதைய போட்டியாளர்களுக்கு நன்கு தெரியும். அதனாலோ என்னவோ அனைவருமே அநியாயத்திற்கு அடக்கி வாசிக்கிறார்கள்.

நடிப்பு
பிக் பாஸ் வீட்டில் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ளன. திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா இருப்பதால் போட்டியாளர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் அவர்களாக இல்லை.

போலி
கேமரா இருக்கிறது, ஏதாவது சண்டை போட்டாலோ, வில்லங்கம் செய்தாலோ ரசிகர்கள் வெறுத்துவிடுவார்கள். சமூக வலைதளங்களில் கால காலத்திற்கும் கழுவிக் கழுவி ஊத்துவார்கள் என்ற பயத்திலேயே போட்டியாளர்கள் இருப்பதாக தெரிகிறது.

ஐஸ்வர்யா
யாஷிகா தான் மெச்சூரான பெண் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவரது வயதுக்கே உரிய குழந்தைத்தனத்துடன் நடந்து கொள்கிறார். சில நேரங்களில் கேமராவை மறந்துவிட்டு பேசுகிறார்.

மாட்டோம்
நம்மை சுத்தி கேமராக்களை வைத்துவிட்டு நடிக்காமல் நீங்கள் நீங்களாக இருங்கள் என்றால் நம்மால் முடியுமா, முடியாது தானே. அப்படி இருக்கும்போது போட்டியாளர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம்.


Click it and Unblock the Notifications











