Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Arundhathi serial: பாஸ்தாவில் முருங்கைக் காய் போடலாமான்னு பாக்கியராஜ் சார்கிட்டேயே...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அமெரிக்காவில் படிச்சுட்டு சொந்த கிராமத்துக்கு வந்திருக்கான் சண்முகம். சுலேகா என்று ஒரு பெண்ணை கூடவே கல்யாணம்பண்ணிக்க அழைச்சுட்டு வர்றான்.
சண்முகத்தின் அம்மா ஈஸ்வரி ,இவங்க ஜமீன் குடும்பம், இந்த குடும்பத்துக்கு கெட்ட ஆவியின் சாபம் இருக்குன்னு எல்லாரும் முருகன் காப்பு கையில் போட்டு இருக்காங்க.
இப்படி சுலேகா ஒரு நாள் கெட்ட ஆவியின் பிடியில் சிக்கி, இதென்ன குடும்பம்னு கோச்சுக்கிட்டு, அமெரிக்காவுக்கே போறேன்னு சொல்லிட்டு போயிடறா.இதனால் ,கல்யாணம் நின்னு போகுது..
சண்முகம் அருந்ததி
அருந்ததி ஆவி, சண்முகத்தின் உடலில்புகுந்து அவனை ஆட்டுவிக்குது.இந்த குடும்பத்துக்கு தீங்கு வராமல் காக்க சிறந்த முருகன் பக்தையான தெய்வானையால் மட்டுமே முடியும். அவளை சண்முகத்துக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நம்பூதிரி அம்மா சொல்ல, ஈஸ்வரி அம்மாவும் அப்படியே செய்து வச்சுடறாங்க.
அருந்ததி உடன்படிக்கை
புருஷன் உடலிலிருந்து அவனை ஆட்டுவிக்கும் அருந்ததியுடன், தெய்வானை ஒரு உடன் படிக்கைக்கு வந்துடறாங்க. அவளை கொன்னவனை கண்டு பிடிக்க தெய்வானை உதவி வேணும்னு அருந்ததியும் ஓப்புக்கிட்டு, சண்முகத்தின் உடலில் இருந்து வெளியில் வந்துடறா. இந்த நேரத்தில்தான் தனக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டு, சண்முகம் தெய்வானையை வெறுக்கிறான்.
டின்னர் நண்பர்களுக்கு
அமெரிக்க கம்பெனிக்கு ஒரு புராஜெக்டை முடித்து வைத்து, நண்பர்களுடன் ஆலோசிக்க அவர்களை வீட்டுக்கு வர சொல்கிறான். அவங்களுக்கு டின்னர் ஏற்பாடு செய்ய சொல்லி அண்ணியிடம் கேட்கிறான்.அண்ணி தெய்வானையை சமைக்க சொல்றா. அதாவது சண்முகத்துக்கு பிடிச்ச பாஸ்தா போன்ற அமெரிக்க உணவுகளை யூ டியுபில் பார்த்து சமைன்னு சொல்லித் தந்துட்டு போறா.
முருங்கை காய் பாஸ்தாவில்
பாஸ்தா மிக அருமையாக செய்து
வைத்திருந்தாலும், ஈஸ்வரி அம்மாவின் ஒர் படி வந்து வேணும்னே அதை கெடுக்க, இதில் சாம்பார் பொடியும், முருங்கை காயும் போட்டால் நல்லாருக்கும்னு சொல்ல ,இவளும் அதை போட்டு சமைச்சு வைக்கிறாள். சண்முகத்தின் நண்பர்கள் வந்து கல்யாணம் செய்துக்கிட்டது ஒரு கிராமத்து பெண்ணை. அதுதான் கொடுமைன்னு பார்த்தா பாஸ்தாவில் முருங்கைக்காயான்னு நக்கல் செய்து, கேலி பண்ணிட்டு சாப்பிடாமப் போயிடறாங்க.
கடுப்பான சண்முகமம் தெய்வானை இனி இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு சொல்றான். ஆமாம்... பாஸ்தாவில் முருங்கை காய் போடக் கூடாதுன்னு சட்டத்தில் இருக்கா.. வாங்களேன் இது பத்தி பாக்கியராஜ் சார் கிட்டேயே கேட்டுடலாம்!