twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Arundhathi serial: பாஸ்தாவில் முருங்கைக் காய் போடலாமான்னு பாக்கியராஜ் சார்கிட்டேயே...!

    |

    சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அமெரிக்காவில் படிச்சுட்டு சொந்த கிராமத்துக்கு வந்திருக்கான் சண்முகம். சுலேகா என்று ஒரு பெண்ணை கூடவே கல்யாணம்பண்ணிக்க அழைச்சுட்டு வர்றான்.

    சண்முகத்தின் அம்மா ஈஸ்வரி ,இவங்க ஜமீன் குடும்பம், இந்த குடும்பத்துக்கு கெட்ட ஆவியின் சாபம் இருக்குன்னு எல்லாரும் முருகன் காப்பு கையில் போட்டு இருக்காங்க.

    இப்படி சுலேகா ஒரு நாள் கெட்ட ஆவியின் பிடியில் சிக்கி, இதென்ன குடும்பம்னு கோச்சுக்கிட்டு, அமெரிக்காவுக்கே போறேன்னு சொல்லிட்டு போயிடறா.இதனால் ,கல்யாணம் நின்னு போகுது..

    சண்முகம் அருந்ததி

    சண்முகம் அருந்ததி

    அருந்ததி ஆவி, சண்முகத்தின் உடலில்புகுந்து அவனை ஆட்டுவிக்குது.இந்த குடும்பத்துக்கு தீங்கு வராமல் காக்க சிறந்த முருகன் பக்தையான தெய்வானையால் மட்டுமே முடியும். அவளை சண்முகத்துக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நம்பூதிரி அம்மா சொல்ல, ஈஸ்வரி அம்மாவும் அப்படியே செய்து வச்சுடறாங்க.

    அருந்ததி உடன்படிக்கை

    அருந்ததி உடன்படிக்கை

    புருஷன் உடலிலிருந்து அவனை ஆட்டுவிக்கும் அருந்ததியுடன், தெய்வானை ஒரு உடன் படிக்கைக்கு வந்துடறாங்க. அவளை கொன்னவனை கண்டு பிடிக்க தெய்வானை உதவி வேணும்னு அருந்ததியும் ஓப்புக்கிட்டு, சண்முகத்தின் உடலில் இருந்து வெளியில் வந்துடறா. இந்த நேரத்தில்தான் தனக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டு, சண்முகம் தெய்வானையை வெறுக்கிறான்.

    டின்னர் நண்பர்களுக்கு

    டின்னர் நண்பர்களுக்கு

    அமெரிக்க கம்பெனிக்கு ஒரு புராஜெக்டை முடித்து வைத்து, நண்பர்களுடன் ஆலோசிக்க அவர்களை வீட்டுக்கு வர சொல்கிறான். அவங்களுக்கு டின்னர் ஏற்பாடு செய்ய சொல்லி அண்ணியிடம் கேட்கிறான்.அண்ணி தெய்வானையை சமைக்க சொல்றா. அதாவது சண்முகத்துக்கு பிடிச்ச பாஸ்தா போன்ற அமெரிக்க உணவுகளை யூ டியுபில் பார்த்து சமைன்னு சொல்லித் தந்துட்டு போறா.

    முருங்கை காய் பாஸ்தாவில்

    முருங்கை காய் பாஸ்தாவில்

    பாஸ்தா மிக அருமையாக செய்து
    வைத்திருந்தாலும், ஈஸ்வரி அம்மாவின் ஒர் படி வந்து வேணும்னே அதை கெடுக்க, இதில் சாம்பார் பொடியும், முருங்கை காயும் போட்டால் நல்லாருக்கும்னு சொல்ல ,இவளும் அதை போட்டு சமைச்சு வைக்கிறாள். சண்முகத்தின் நண்பர்கள் வந்து கல்யாணம் செய்துக்கிட்டது ஒரு கிராமத்து பெண்ணை. அதுதான் கொடுமைன்னு பார்த்தா பாஸ்தாவில் முருங்கைக்காயான்னு நக்கல் செய்து, கேலி பண்ணிட்டு சாப்பிடாமப் போயிடறாங்க.

    கடுப்பான சண்முகமம் தெய்வானை இனி இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு சொல்றான். ஆமாம்... பாஸ்தாவில் முருங்கை காய் போடக் கூடாதுன்னு சட்டத்தில் இருக்கா.. வாங்களேன் இது பத்தி பாக்கியராஜ் சார் கிட்டேயே கேட்டுடலாம்!

    English summary
    Sun TV's Arundhati Sanmukam has come to her native village in the US. Even a girl called Sulekha invited to marry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X