பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா? விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக இயக்குநர் சேரன் தேர்வாகியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் இதுவரை கேப்டன் ஆகி விட்டார்கள்.
சேரன், கவின், லாஸ்லியா, கஸ்தூரி ஆகியோர்தான் இதுவரை பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகவில்லை. ஒவ்வொரு முறையும் டாஸ்க்கையும் வாரப்பணிகளையும் சரியாக முடிக்கும் சேரன் கேப்டனாக வாய்ப்பே கிடைக்கவில்லை.

சேரன் தோல்வி
இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் முறையாக கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்றார் சேரன். ஆனால் அந்த போட்டியில் சேரன் தோல்வியடைந்து கேப்டன் வாய்ப்பை தவறவிட்டார்.

பரிந்துரை
இதனால் கேப்டனாக ஆசைப்பட்ட சேரன் ஏமாற்றத்திலேயே இருந்தார். இந்த முறை டாஸ்க்கிலும் சரி, வாரப் பணியிலும் சரி சேரனின் பெயரை ஹவுஸ்மேட்ஸ்கள் பரிந்துரைத்தனர்.

கேப்டனுக்கான போட்டி
இதனை தொடர்ந்து சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகிய மூன்று பேரும் இரண்டாவது முறையாக கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று கேப்டனுக்கான போட்டி நடைபெறுகிறது.

சேரனின் பெயர்
அதன்படி எந்த போட்டியாளரின் பெயர் முதலில் ஐந்து முறை எடுக்கப்படுகிறதோ அவரே வீட்டின் கேப்டன் என அறிவிக்கிறார் பிக்பாஸ். இதைத்தொடர்ந்து சேரனின் பெயர் முதலில் ஐந்து முறை எடுக்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டின் கேப்டன்
இதனால் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அறிவிக்கப்படுகிறார். நீண்ட நாட்கள் எதிர்பார்ப்புக்கு பின்பு சேரன் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகிழ்ச்சி
இதனை பார்த்த ரசிகர்கள் சேரன் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தகுதியுடையவர் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











