Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்
சென்னை: தொலைக்காட்சியில் முதல்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் "100" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . செப்டம்பர் 19 முதல் வாரத்தின் ஏழு நாட்களும் இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களையும் வழங்கவிருக்கிறது.
தமிழகத்தின் முக்கிய பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அதன் பிரபல தொடர்களான பொம்மி B.A.B.L, இதயத்தை திருடாதே, அபி டெய்லர், சில்லுனு ஒரு காதல் ஆகியவற்றை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் கலர்ஸ் தமிழின் பார்வையாளர்கள் அவர்களுக்கு பிடித்த தொடர்களை இனி திங்கள் முதல் ஞாயிறு வரை புதிய நேரத்தில் பார்த்து மகிழலாம்.
டாக்டர் வீரபாபு,கொரோனா சமயத்தில் பெரிதும் பேசப்பட்டவர் ... குழந்தைகளுக்கான படம் இயக்கி உள்ளார்
முதல் முறையாக
உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் கலர்ஸ் தமிழ் அதன் பிரபல சன்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக அதர்வா நடித்து 2019-ம் ஆண்டில் வெளியான " 100 " திரைப்படத்தை செப்டம்பர் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.
லட்சியமிக்க போலீஸ்காரன்
சாம் ஆன்டன் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் கதைக்களமானது ஒரு லட்சியமிக்க போலீஸ்காரரான சத்யாவை (அதர்வா) சுற்றி வருகிறது.
எதிர்பாராத திருப்பத்தை
காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீஸ்காரரான அவர் அங்கு வரும் அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கிறார். இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து சத்யாவுக்கு ஒரு போன் வருகிறது. இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து போன் வந்ததால், அது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சத்யா குற்றவாளியை பிடித்து அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதையாகும்.
கன்னித் தீவு உல்லாச உலகம்
இது மட்டும் இன்றி மகிழ்ச்சியை மேலும் ஒரு படி உயர்த்தும் வகையில், நக்கலும் நையாண்டியும் நிறைந்த பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 - இல் இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி பங்கேற்க இருக்கிறார். மன்னர் ஜல்சா மற்றும் அவரது தீவுவாசிகளுடன் இவரது நகைச்சுவை நிறைந்த உரையாடல் நிச்சயம் சிரிக்க வைக்கும்.
வார இறுதிக்கு
இவர்களுடன் நகைச்சுவை நடிகர் அமுதவாணனும் இந்த நிகழ்ச்சியில் தோன்றி மேலும் சிரிக்க வைக்க இருக்கிறார். இது செப்டம்பர் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.அன்றைய தினம் நண்பகல் 12 மணியில் இருந்து இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்க இருப்பதால், உற்சாகமிகுந்த வார இறுதிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.