அழகு தாங்குவா..அழகு தாங்குவான்னா எவ்ளோ தாங்குவா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் நடிகை ரேவதிக்கான முக்கியத்துவம்னு எதுவும் இல்லை.
அழகு சீரியல் குடும்பத்துல ரேவதி அழகம்மையை ஒரு நல்ல அம்மா, நல்ல மனைவி, நல்ல மாமியாரா.. மொத்தத்துல ஒரு நல்ல குடும்பஸ்தியா காமிக்கறாங்க.
தேவையான போது...வந்துட்டு போற மாதிரிதான் கதை இருக்குது. அடடா ரேவதி நடிச்சு இருக்காங்க இந்த சீரியலை பார்க்கலாம்னு ஒரு ஆவல் வரலை.

வீட்டு பையன்
வளையகாப்பு அணிவிச்சு விழா நடத்தி மகள் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைச்சசுட்டு வந்துடறாங்க. பெரிய பணக்கார வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தும்,ஐ ஸ்வரியா புருஷன் வேலை இல்லாம இருக்கானாம்.

வேலை
அப்பா பெரிய தொழிலதிபர்..வளைய காப்புக்கு மனைவிக்கு பரிசு தரணும்னு இடம் வித்து தந்து தரகர் வேலைப் பார்த்து வளையல் வாங்கிட்டு வர்றான். இந்த வளையலை நடுத்தெருவில் நின்னு இடம் வித்து தர காரணமா இருந்த நண்பன்கிட்ட காமிக்கறானாம். இதை ஒரு திருடன் பார்த்துட்டு நகையை தட்டிகிட்டு ஓட... அவனைத் துரத்திக்கிட்டு போன ஐஸ்வரியா புருஷன் திருடனைத் தள்ளி விடறான்.

கொலை
இதனால் திருடன் கிரிட்டிகலான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கான்னு ஐஸ்வர்யா புருஷனை கைது செய்துடறாங்க.பிறகு அழகு மருமகள் லாயர் சுதா திருடன்தான் உயிரோட இருக்கானே..இப்போதைக்கு அவரை விட்டுருங்கன்னு சொல்லி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறா.

அத்தை
வீட்டில் இருக்கும் அத்தை எப்போது யார் குடும்பத்தை கெடுக்கலாம்னு அலையறாங்க... ஆஸ்பத்திரியில் இருக்கும் திருடனின் பையனிடம் போயி, உங்க அப்பாவை கொன்னுடு... உனக்கு நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லித் தர்றாங்க.

அப்பாவை
பையனும் அப்பாவுக்கு கொடுத்திருந்த ஆக்சிஜன் டியூப்பை எடுத்துட அவர் செத்துடறார். இப்போ அழகம்மையின் மருமகன் மாட்டிக்கறான். இதுதான் அழகம்மையின் நாத்தனார் செய்த சதி வேலை. புருஷனை தாக்க வந்த ரவுடிகளால் நிறை மாச கர்ப்பினி அழகம்மையின் மகள் தள்ளிவிடப்படறா.

கெட்டவங்களா
இப்போதுதான் அழகம்மை சாமிகிட்ட வேண்டிக்கறாங்க.. அழகு தாங்குவா அழகு தாங்குவான்னு எத்தனை கஷ்டத்தை எனக்கு தருவேன்னு... அழகம்மையின் நாத்தனார் இவ்ளோ கெட்டவங்களாவும் இருப்பாங்களா..


Click it and Unblock the Notifications











