Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அழகு தாங்குவா..அழகு தாங்குவான்னா எவ்ளோ தாங்குவா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் நடிகை ரேவதிக்கான முக்கியத்துவம்னு எதுவும் இல்லை.
அழகு சீரியல் குடும்பத்துல ரேவதி அழகம்மையை ஒரு நல்ல அம்மா, நல்ல மனைவி, நல்ல மாமியாரா.. மொத்தத்துல ஒரு நல்ல குடும்பஸ்தியா காமிக்கறாங்க.
தேவையான போது...வந்துட்டு போற மாதிரிதான் கதை இருக்குது. அடடா ரேவதி நடிச்சு இருக்காங்க இந்த சீரியலை பார்க்கலாம்னு ஒரு ஆவல் வரலை.
அருந்ததி.... காப்பை வச்சே கதையை ஓட்டிடலாமா? இதுல கோவை சரளா வேற!
வீட்டு பையன்
வளையகாப்பு அணிவிச்சு விழா நடத்தி மகள் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைச்சசுட்டு வந்துடறாங்க. பெரிய பணக்கார வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தும்,ஐ ஸ்வரியா புருஷன் வேலை இல்லாம இருக்கானாம்.
வேலை
அப்பா பெரிய தொழிலதிபர்..வளைய காப்புக்கு மனைவிக்கு பரிசு தரணும்னு இடம் வித்து தந்து தரகர் வேலைப் பார்த்து வளையல் வாங்கிட்டு வர்றான். இந்த வளையலை நடுத்தெருவில் நின்னு இடம் வித்து தர காரணமா இருந்த நண்பன்கிட்ட காமிக்கறானாம். இதை ஒரு திருடன் பார்த்துட்டு நகையை தட்டிகிட்டு ஓட... அவனைத் துரத்திக்கிட்டு போன ஐஸ்வரியா புருஷன் திருடனைத் தள்ளி விடறான்.
கொலை
இதனால் திருடன் கிரிட்டிகலான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கான்னு ஐஸ்வர்யா புருஷனை கைது செய்துடறாங்க.பிறகு அழகு மருமகள் லாயர் சுதா திருடன்தான் உயிரோட இருக்கானே..இப்போதைக்கு அவரை விட்டுருங்கன்னு சொல்லி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறா.
அத்தை
வீட்டில் இருக்கும் அத்தை எப்போது யார் குடும்பத்தை கெடுக்கலாம்னு அலையறாங்க... ஆஸ்பத்திரியில் இருக்கும் திருடனின் பையனிடம் போயி, உங்க அப்பாவை கொன்னுடு... உனக்கு நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லித் தர்றாங்க.
அப்பாவை
பையனும் அப்பாவுக்கு கொடுத்திருந்த ஆக்சிஜன் டியூப்பை எடுத்துட அவர் செத்துடறார். இப்போ அழகம்மையின் மருமகன் மாட்டிக்கறான். இதுதான் அழகம்மையின் நாத்தனார் செய்த சதி வேலை. புருஷனை தாக்க வந்த ரவுடிகளால் நிறை மாச கர்ப்பினி அழகம்மையின் மகள் தள்ளிவிடப்படறா.
கெட்டவங்களா
இப்போதுதான் அழகம்மை சாமிகிட்ட வேண்டிக்கறாங்க.. அழகு தாங்குவா அழகு தாங்குவான்னு எத்தனை கஷ்டத்தை எனக்கு தருவேன்னு... அழகம்மையின் நாத்தனார் இவ்ளோ கெட்டவங்களாவும் இருப்பாங்களா..