Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சீரியலில் குடுமிபிடிசண்டை..இந்தி பாட்டுக்கு குத்தாட்டம் போடும் ராதிகா,பாக்யா..இது கோபிக்கு தெரியுமா?
சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் கோபிக்காக குடுமிபிடிசண்டைபோடும் ராதிகா மற்றும் பாக்யா இந்தி பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்யலட்சுமி சீரியல்தான் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த சீரியலில், கட்டுன மனைவிக்கு துரோகம் செய்த, ஈகோயிஸ்ட் கணவனை பற்றிய கதைதான் இது.
அடுத்து பெரிசா ஒரு சம்பவம் இருக்கு...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து இதுதான் நடக்க போகுது
பாக்யலட்சுமி
கணவன், பிள்ளைகள் என குடும்பமே உலகம் என்று வாழ்ந்து வரும் இல்லத்தரசி கதாபாத்திரத்தில் அதாவது பாக்யலட்சுமியாக, அழகாக நடித்து வருகிறார் சுசித்ரா. ஒட்டுமொத்த குடும்பத்தின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு நேரத்திற்கு வாய்க்கு ருசியாக சமைத்து குடும்பத்தை கட்டுக்கோப்பாக காத்துவருகிறார் பாக்யா.
ராதிகாவுடன் காதல்
அப்பா, அம்மாவின் வற்புறுத்ததால் திருமணம் செய்து கொண்ட கோபி, பாக்யாவிடம் பிடிக்காமல் ஏனோதானோ என வாழ்த்து வருகிறான். இந்த நேரத்தில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை எதர்ச்சையாக சந்திக்கிறான். அவளுடன் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் ராதிகா திருமணம் செய்து கொள்ளும்படி கூற திக்குமுக்காடிப்போகும் கோபி. பாக்யாவுக்கு தெரியாமல் அவளை ஏமாற்றி விவாகரத்திற்கு அழைத்து செல்கிறான்.
குடும்பத்தில் பூகம்பம்
இதையடுத்து, கோபி - ராதிகா உறவு பாக்யாவுக்கு தெரிய வருகிறது இதனால், குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிக்கிறது. இந்த நேரத்தில், தனக்கு தன்மானம் தான் முக்கியம் என முடிவு செய்யும் பாக்யா. தனது, கணவன் ஏமாற்றி கேட்ட விவாகரத்தை தானாக முன்வந்து கொடுத்துவிடுகிறாள். விவாகரத்து ஆன பின்னும் கோபி வீட்டிற்கு வரும் பாக்யா அவரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
அனைவரும் கோபத்தில்
இதையடுத்து,கோபியின் அப்பா கோபியை வீட்டை விட்டுவெளியே அனுப்பி விடுகிறார். இப்போது ராதிகாவும் கோபியை சேர்த்துக்கொள்ளவில்லை, அப்பாவும் வீட்டைவிட்டு துரத்திவிட்டதால், ஹோட்டலில் தங்கி வருகிறார் கோபி. யார் சொல்லியும் கேட்காமல் பாக்யா விவாகரத்து கொடுத்து விட்டதால், ஈஸ்வரி,இனியா,செழியன், ஜெனி என அனைவரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.
ஈகோயிஸ்ட் கணவன்
கோபி மாதிரி ஈகோயிஸ்ட் கணவர்களால் அல்லல்பட்ட அம்மாவின் குமுறலை புரிந்து கொண்ட எழில் தனது தாய் பாக்யாவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். அடுத்து என்னவாகும், ராதிகா கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா? பாக்யா குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வார் என சீரியல் ரொம்ப சுவாரசியமாக போய்க்கொண்டு இருக்கிறது.
கோபிக்கு தெரியுமா?
இந்நிலையில், ராதிகாவும் பாக்யாவும் இந்தி பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இருவரும் சும்மா இறங்கி குத்தி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிககர்கள் கதிஜா மற்றும் கண்மணி என்றும், சிரியலில் குடுமிபிடி சண்டை அதற்கு பின்னால் ஆட்டமா என்றும் கேட்டு வருகின்றனர்.இன்னும் சிலர் இது கோபிக்கு தெரியுமா? பல விதமான கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.