twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Baakiyalakshmi serial:வீட்டில் திரும்ப கால் எடுத்து வெச்ச நடக்கிறதே வேற..பாக்யாவிடம் கொந்தளித்த கோபி

    |

    சென்னை : இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாக்யலட்சுமி தொடராகும் இந்த தொடரில் இன்றைய எபிசோடில் என்னென்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாமா?

    என்னமோ நான் தான் உன்னை ஏமாற்றிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன் என்று கத்துனியே உண்மையில் யார் ஏமாந்தது. நான் தான் ஏமாந்தேன், நான் தான் ஒரு ஏமாளி.

    வெளிஉலகத்தை பத்தி ஒன்னுமே தெரியாத மரமண்டையோட இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்கேனே என்னைவிட ஏமாளி வேறயாரு இருக்க முடியும் என்று கோவத்தின் உச்சிக்கே சென்று கோபி கத்துகிறார்.

    ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ? ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ?

    கோபத்தில் கத்திய கோபி

    கோபத்தில் கத்திய கோபி

    ஏய் உனக்கு என்னை பிடிக்கலதானே, அதன் டைவர்ஸ்னு சொன்னதும் துள்ளி குதிச்சிக்கிட்டு கோர்ட்டுக்கு ஓடிவந்துட்டா. அப்போ இத்தனை வருஷம் ஏன் அதை வெளியில் சொல்லல, நானே சொல்லட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தியா? அப்போத்தான் யாரும் உன்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க, உன்னை பார்த்து பாவப்படுவாங்கனு நினைச்சிட்டு காத்துக்கிட்டு இருந்தியா என கோபி கேட்டதும் டென்ஷன் ஆன எழியில் அப்பா இது எல்லாம் ரொம்ப ஓவர் என்று கத்துகிறான்.

    எல்லாப்பழியும் என் மேல

    எல்லாப்பழியும் என் மேல

    என்னடா ஓவர்,எனக்கு உங்க அம்மாவை பிடிக்கலத்தான், அதை எந்த இடத்திலாவது காட்டி இருக்கேனா, இல்ல அவளுக்கு ஏதாவது குறைவெச்சி இருக்கேனா? இந்த குடும்பத்திற்கு தலைவான என்ன செய்யனுமோ அதை எல்லாத்தையும் இப்போ வரைக்கும் செய்து கொண்டுத்தான் இருக்கேன். ஆனால், எல்லாப்பழியையும் என் மீது போடுவது நியமாடா?

    திரும்ப வீட்டிற்கு வந்துடாதே

    திரும்ப வீட்டிற்கு வந்துடாதே

    இவ்வளவு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையை இப்படி தூக்கிப்போட்டு போறியே உன் உடம்புக்குள்ள எவ்வளவு திமிரு இருக்கும். இதுக்கு முன்னாடி உன் மனசுக்குள் எவ்வளவு பிளான் போட்டு இருப்பா. நடத்து பாக்கியா நடத்து. ஆனால், ஒன்னே ஒன்னு திரும்ப அந்த வீட்டில் மட்டும் கால் எடுத்துவெச்சிடாதா? வெச்சேனா நடக்குறதே வேற என கத்திவிட்ட அங்கிருந்து கிளம்புகிறார்.

    மும்பை போறது போறதுதான்

    மும்பை போறது போறதுதான்

    இதையடுத்து, ராதிகா வீட்டில் மையுக்கு உடம்பு எப்படி இருக்கு என்று ராதிகாவின் அண்ணன் கேட்க. ஜூரம் இருக்கு மாத்திரை கொடுத்து இருக்கிறேன் என்கிறார். ராதிகா நீ நிச்சயமா மும்பை போற முடிவில் மாற்றம் ஏதும் இல்லையே, மையு ஸ்கூலில் இருந்த சர்பிஃகேட் கூட வாங்கியாச்சு நீ முடிவை மாத்துனினா? அவ படிப்புத்தான் பாதிக்கும் என்று கூறுகிறார். மும்பை போறது போறதுதான் மையுக்கு உடம்பு சரி ஆகட்டும் என்கிறார் ராதிகா.

    நீ தான் முடிவு எடுக்க வேண்டும்

    நீ தான் முடிவு எடுக்க வேண்டும்

    இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வரும் கோபி, ஒரு பேப்பரை காட்டி டைவர்ஸ் கிடைச்சிடுச்சி என்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதிகா, என்ன சொல்றீங்க கோபி இதுக்கு நீங்க எப்படி சம்மதிச்சீங்க என கேட்க. நான் என்ன பண்றது ராதிகா, பாக்யா எனக்கு முன்னாடியே கோர்ட்டுக்கு போய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறார். எது எப்படியோ இது எல்லாமே உன் மேல இருந்த காதலால் தான் நடந்துச்சு, இனி என்ன செய்ய வேண்டும் என நீ தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறுகிறார்.

    குழப்பத்தில் குடும்பம்

    குழப்பத்தில் குடும்பம்

    எழிலும் பாக்யாவிடம் அம்மா இப்போ எங்கே போவது என கேட்க, எங்கையாவது போடா, ஆனால் முதலில் எனக்கு பசிக்கிது ஏதாவது ஹோட்டலுக்கு போ என்கிறாள். கோபி வீட்டில் கோர்ட்டில் என்ன நடந்தது என தெரியாமல் ஆள் ஆளுக்கு காவலையில் இருக்கிறார். இத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

    English summary
    baakiyalakshmi serial today episode..Gopi fight with bakiya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X