Baakiyalakshmi serial : ராதிகாவை அசிங்கப்படுத்திய செழியன்..ஆத்திரத்தில் கொந்தளித்த கோபி!

சென்னை : பாக்கியலட்சுமி சீரியலில் இன்று போன் செய்த ராதிகாவை அசிங்கப்படுத்தி கண்டபடி கேள்வி கேட்கிறார் செழியன்.

Recommended Video

Bakyalakshmi Serial Review | திரும்ப வீட்டிற்கு வந்துடாதே...

கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு எழியனுடன் ஹோட்டலுக்கு வந்த பாக்யா அங்கு விருந்து சாப்பிடுவதை போல பிரியாணி,மீன், சிக்கன் என பலவற்றை சாப்பிடுகிறார்.

பாக்யா விரும்பி சாப்பிடுவதை பார்த்த எழில், அம்மா உங்களுக்கு ஓட்டல் சாப்பாடுனா இவ்வளவு பிடிக்குமா என கேட்கிறார். ஆமாம், எழில், யாராவது சமைச்சி கொடுத்த நல்லா சாப்பிடலாமே என சொல்லிவிட்டு, பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.

அழுது புலம்பும் இனியா

அழுது புலம்பும் இனியா

மறுபுறம் பாக்யாவை நினைத்து அழும் இனியாவிடம், இன்னைக்கு இல்லை உன் அம்மா என்னைக்குமே வரமாட்டா. நான் வேண்டாம், பிள்ளைகள் வேண்டாம், குடும்பமே வேண்டாம்னு போனவ எப்படி வருவா. அவ உன் அம்மா என்ற எண்ணத்தை மனசில் இருந்து இறக்கி வெச்சிடு. நான் அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக இருந்து உன்னை பார்த்துக் கொள்வேன் என கூறி கோபி ஆறுதல் தெரிவிக்கிறார்.

கொந்தளித்த கோபி

கொந்தளித்த கோபி

இனி மேல் பாக்யாவே விருப்பபட்டு இந்த வீட்டுக்கு வந்தக்கூடாது நான் சேர்த்துக்க மாட்டேன். விட்டு கொடுப்பதற்கும், இறங்கி வருவதற்கும் ஒரு அளவு இருக்கு. நான் செய்தது ஒரு தப்புனா, அவ அதைவிட பல தப்பு பண்ணிட்டா. அவ என்னை பழிவாங்க பாக்குற அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். என்னை மீறி எனக்கு தெரியாமல் யாராவது அவருடன் பேசுவது, சமாதானப்படுத்த நினைச்ச நடப்பதே வேற என தெரிவிக்கிறார்.

நிலைமை கைமீறி விட்டது

நிலைமை கைமீறி விட்டது

இதனைத் தொடர்ந்து ஜெனி, செழியன் இருவரும் விவாகரத்து பற்றி பேசிக்கொண்டு இருக்க. ஏதாவது செய்து பாக்யாவை அழைத்து வர ஜெனி சொல்ல செழியனோ நிலைமை கைமீறி விட்டது கூறி புலம்புகிறார். தொடர்ந்து ராதிகாவிடம் இருந்து ஜெனிக்கு போன் வருகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர் போனை எடுத்து பேசுகிறார். ராதிகா எல்லாரும் எப்படி இருக்கீங்க என கேட்டு நடந்ததை எல்லாம் நான் கேள்விப்பட்டேன். உண்மையிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக கேட்கிறார்.

ராதிகாவை அசிங்கப்படுத்திய செழியன்

ராதிகாவை அசிங்கப்படுத்திய செழியன்

இதனால் ஆத்திரமடையும் ஜெனி எல்லா பிரச்சனையும் உங்களால் தான் என தெரியாமல் பேசுறீங்களா? கூட்டுக் குடும்பத்தை உடைத்தால் என்ன வலி ஏற்படும் என உங்களுக்கு தெரியுமா என சரமாரியாக ராதிகாவிடம் கேள்வி எழுப்புகிறார். அவரிடமிருந்து போனை வாங்கி பேசும் செழியன் உங்களால் தான் இவ்வளவு பிரச்சனையும், கெட்ட வார்த்தை பேச தெரியும் என்ன பேச வச்சிராதீங்க. இனி போன் பண்ணாதீங்க என கூறி போனை கட் செய்தார்.

அழுது புலம்பும் ராதிகா

அழுது புலம்பும் ராதிகா

இதனால் கலங்கி நிற்கும் ராதிகாவிடம் என்னவென்று அண்ணன் சந்துரு விசாரிக்க நான் ஒரு அக்கறையில் தான் கேட்டேன். ஆனால் எல்லாரும் என்ன தப்பாபுரிஞ்சிக்கிட்டாங்க என அழுது புலம்புகிறார். உடனே சந்துரு இதற்குத்தான் நான் போன் பண்ணாதேனு சொன்னேன். நீ உன்னையே ஏமாத்திக்காத என கூறி சமாதானப்படுத்துகிறார், இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X