வீட்டை விட்டு வெளியேறிய கோபி.. பாக்கியாவை வெறுக்கும் பிள்ளைகள்!

சென்னை :விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த ட்விஸ்ட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

Recommended Video

என்னது பாக்கியாவும் கோபியும் மீண்டும் சேரப் போறாங்களா.. இது என்ன புது Twist! *Tv

அடுத்தடுத்த சிறப்பான பிரமோஷன்கள் இந்த தொடருக்கு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்தத் தொடரின் ஹைலைட்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பரபரப்பான எபிசோட்களை வழங்கிவரும் இந்தத் தொடரில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோபி வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி மாறியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என சேனலின் முன்னணி தொடர்களை ஓரம்கட்டி தற்போது பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது. பரபரப்பான அடுத்தடுத்த எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு பரிசளித்து வருகிறது.

 விவாகரத்து கொடுத்த பாக்கியா

விவாகரத்து கொடுத்த பாக்கியா

ராதிகா -கோபி காதல் குறித்து தெரியவரும் பாக்கியா, தன்னைத் தானே நொந்துக் கொள்கிறார். ஆனால் வைராக்கியமாக மீண்டு எழுகிறார். தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கத் துணிகிறார். கொடுத்தும் விடுகிறார். இந்நிலையில் முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.

 வீட்டைவிட்டு வெளியேறிய கோபி

வீட்டைவிட்டு வெளியேறிய கோபி

தன்னுடைய துணிமணிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் வெளிநடப்பு செய்வார், புதிதாக பிசினஸ் துவங்குவார் என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த இடத்தில்தான் ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குநர். தான் கொண்டுவந்த பெட்டியில் தன்னுடைய துணிமணிகளுக்கு பதிலாக கோபியின் துணைகளை அடுக்கியிருந்தார் பாக்கியா.

கோபியை வெளியேற்றிய அப்பா

கோபியை வெளியேற்றிய அப்பா


இதனால் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியடைகிறது. தொடர்ந்து கோபியின் அப்பா ராமமூர்த்தி, இந்த வீட்டிற்காக பல தியாகங்களை செய்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேற வேண்டியவள் அல்ல என்றும் கோபியே வெளியே செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

கோபியின் சவாலை ஏற்கும் பாக்கியா

கோபியின் சவாலை ஏற்கும் பாக்கியா

தொடர்ந்து கோபி வீடுகட்டுவதற்காக தான் செலவழித்த பணத்தை திருப்பிக் கேட்க, ஒரு வருடத்தில் அதை திருப்பித் தருவதாக சவாலை ஏற்கிறாள் பாக்கியா. தொடர்ந்து தனக்கும் கோபிக்கும் விவாகரத்து ஆனதால் ஒரே அறையில் தன்னால் இருக்க முடியாது என்றும் கோபி தன்னுடைய அறையில் தங்கக்கூடாது என்றும் கூறுகிறாள்.

ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி

ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி

இதனால் ஆத்திரமடையும் கோபி, தன்னுடைய தந்தை தன்னை வெளியேற சொன்னதை கேட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார். தொடர்ந்து ராதிகா வீட்டிற்கு சென்று தான் போக்கிடம் இல்லாமல் தெருவில் அலைவதாக கூறி அனுதாபத்தை பெற முயல்கிறார். இதனால் ராதிகா செய்வது அறியாமல் திகைக்கிறார்.

 பாக்கியாவிடம் ஆத்திரமடையும் பிள்ளைகள்

பாக்கியாவிடம் ஆத்திரமடையும் பிள்ளைகள்

இதனிடையே தன்னுடைய தந்தை வீட்டை வெளியேறியது குறித்து ஆத்திரமடையும் இனியா மற்றும் செழியன், தன்னுடைய தாய் பாக்கியாதான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர்மீது ஆத்திரமடைகின்றனர். அவர்களின் முகச்சுளிப்புகளால் கண்கலங்கும் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறுகிறார் எழில்.

அடுத்தடுத்து சிக்கலில் ராதிகா

அடுத்தடுத்து சிக்கலில் ராதிகா

இதனிடையே ராதிகா வீட்டைவிட்டு தனது மகள் வெளியில் வருவதை பார்க்கும் அவரின் தந்தை, ராதிகா வீட்டிற்கு சென்று கோபத்துடன் அவரை திட்டிவிட்டு வருகிறார். தொடர்ந்து அவர் தன்னுடைய மனைவியிடம் இதைக்கூற, அவரும் தன்னுடைய பங்கிற்கு ராதிகா வீட்டிற்கு சென்று அவரை வசைபாடுகிறார்.

கதறும் ராதிகா

கதறும் ராதிகா

இதனால் ராதிகா செய்வதறியாமல் திகைக்கிறார். தான் ஒன்றும் கோபியை வீட்டிற்குள் ஒளித்து வைக்கவில்லை என்றும், தன்னை வார்த்தைகளால் கொல்ல வேண்டாம் என்றும் கதறுகிறாள். இவ்வாறு அந்த ஹைலைட்ஸ் காட்சிகள் காணப்படுகின்றன. கோபியின் கோரிக்கை, மற்றும் அவனது குடும்பத்தினரின் கோபம் இதற்கிடையில் சிக்கி செய்வதறியாமல் திகைக்கிறாள் ராதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X