Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரம்யா பாண்டியனை நெஞ்சில் வாங்கிய பாலா.. உருகிப் போன ரசிகர்கள்.. !
சென்னை: கடை திறப்பு க்கு சென்று ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட ரம்யா பாண்டியனை, பாலாஜி தோளில் சாய்ந்தபடி லாவகமாக கூட்டத்தை விலக்கி அவரை காப்பாற்றிய வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
திரைப்பட கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ரம்யா பாண்டியனுக்கு நாளுக்கு நாள் வலைத்தளங்களில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது.
இவர் போட்டோஷூட் மூலமாக பெற்றுவிட்டார் என்று பலர் கூறி வந்தாலும் இவருடைய அழகையும் கேரக்டரையும் புரிந்து கொண்ட ரசிகர்கள் இவரை பற்றி புகழ்ந்து தள்ளி வருகின்றனர் .
கையிலேயே பிடிக்க முடியலை... அதிசயமே அசந்து போகும் அதிசயம் ரக்ஷிதா.. செம!
எடுப்பான இடுப்பழகி
இடுப்பு மடிப்பால் பலரை கிறங்க வைத்தவர் என்று சொன்னால் இவரை தவிர யாரையும் கூற முடியாது என்று இவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் ஜோக்கர் படத்தில் கிராமத்து தேவதையாக வலம் வந்து இருந்தாலும் இவரை அந்த அளவிற்கு ரசிக்காத ரசிகர்கள் அதற்குப் பிறகு வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி கழிப்பது என்று தான் முதல் முறையாக ஃபோட்டோஷூட்டை ஆரம்பித்தார் .
மொட்டை மாடி ஷூட்
அதுவும் மொட்டை மாடியில் விதவிதமாக இடுப்பு மடிப்பை காட்டி சமூக வலைத்தளங்களை கலக்கு கலக்கு என கலக்கிவிட்டார். இவருக்குப் பிறகு இவருடைய பாப்புலர் தெரிந்து கொண்ட பல நடிகைகளும் போட்டோ ஷூட் ஆயுதத்தை கையில் எடுத்தனர். இந்த வகையில் பலர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மூலமாக பலர் பிரபலம் அடைவதற்கு முழு முதல் காரணம் இவர்தான்.
புகழுடன் சூப்பர் கெமிஸ்ட்ரி
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் குக் வித் கோமாளி இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கும் இவர் தான் காரணம் என்று இவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .இவருக்கும் அந்த நிகழ்ச்சியில் புகழுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக செட் ஆனதால் அவர்களின் அலப்பறையை பார்ப்பதற்காகவே பல பேர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர் .
பிக் பாஸ்
இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகு இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போடுவதை கொஞ்சம் குறைத்து விட்டார் .நேரம் இல்லாத காரணத்தினால் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டார் .ஆனால் கிடைக்கும் நேரம் எல்லாத்துக்கும் மொத்தமாக ரசிகர்களின் கண்களுக்கு முழுமையாக போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டிருந்தார்.
சிங்கப் பெண்
அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 வது சீசனில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததுமே இவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். இவருடைய ரசிகர்களின் ஆதரவினால் தான் கடைசி நாள் வரைக்கும் சிங்கிள் பெண்ணாக இந்த வீட்டிற்குள் இருந்தார். அவருக்கு சிங்கப்பெண் என்று பட்டம் கொடுத்து அவருடைய ரசிகர்கள் செம மூவ்மெண்ட் பண்ணிவிட்டார்கள்.
செல்லத் தலைவி
வெளியே வந்த பிறகு தான் இவருக்கு இவருடைய ரசிகர்கள் இவரை இந்த அளவிற்கு சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தாலும் அனைவரையும் இவருடைய ரசிகர்களின் மனதில் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருந்தார் .
திறப்பு விழாக்கள்
தற்போது இவரை பல கடைதிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஸ்கூல் காலேஜ் பங்க்ஷன் களுக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்து வருகின்றனர். இவர் வரும் இடங்களில் பேனர்களும் மேளத்தோடு வரவேற்பு தடபுடலாக வேட்டு சத்தத்தோடு அதிர வைத்து வருகின்றனர். அதுவுமில்லாமல் இவருடைய ரசிகர்கள் கூட்டம் அங்கு அலை மோதுகின்றது.
நெஞ்சில் சாய்ந்தார்
தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு கடை திறப்பு பங்ஷனுக்கு இவரும் இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் உடன் கலந்து கொண்ட பாலாஜியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தனர் .இவர்கள் இருவரும் அங்கு செல்லும்போது செண்டா மேளத்தோடு கடல் அலை போல ரசிகர்கள் கூட்டம் கூடியது. அதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சமாளிக்க பாண்டியனை பாலாஜி நெஞ்சில் தோளோடு சாய்த்தபடி காப்பாற்றிவிட்டார் .
கலாய்க்கும் ரசிகர்கள்
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சும்மாவே கலாய்க்கும் நெட்டிசன்கள் இதைப் பார்த்தால் சும்மா விடுவார்களா ரம்யா பாண்டியனையும் பாலாஜியையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். என்ன இருந்தாலும் ரம்யா பாண்டியனோட நல்லதோஸ்த்தான் பாலாஜி. இப்போது தோள் கொடுத்த தோழனாக மாறியிருக்கிறார்.