Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Lakshmi stores serial: கண்டுக்காம போறான் பட்டர் பிஸ்கட்... கண்ணீருடன் பஞ்சுமிட்டாய்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரன்னு ஒளிபரப்பாகிட்டு இருக்கு. பாக்கியலட்சுமி ரிஜிஸ்டர் ஆஃபீசில வைத்து தன் தாத்தாவை அடித்த தேவராஜை கன்னத்தில் பதிலுக்கு அறைந்து விடறா.
இதைப் பார்த்த ரவி கோபப்பட்டு, என்ன காரியம் செய்துட்டே பாக்கிய லட்சுமின்னு கத்தறான். உண்மையில் தாத்தாவை தேவராஜ் அறைய வரவில்லை. அக்காவைத் தள்ளி விட்டதும், பாக்கிய லட்சுமியின் தங்கை தன்னை எதிர்த்துப் பேசியதால் ,அவளை அடிக்கப் போன தேவராஜின் கை தாத்தா மேல் பட்டுவிடுகிறது.
என்னதான் தாத்தாவை தேவராஜ் அடித்திருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதர்.அவரை சட்டையைப் பிடித்து உலுக்கி பாக்கியலட்சுமி பல கேள்விகளும் கேட்டாச்சு. அதற்கு ப்பிறகும் தேவராஜை அடிப்பது என்றால், இது ரொம்ப மிகைதான்.
இன்று இரவு ரணகளமாகப் போகும் பிக் பாஸ் வீடு: குஷியில் பார்வையாளர்கள்
போகணும் மாகாலட்சுமி
பாக்கிய லட்சுமி, ரவி ரிஜிஸ்டர் கல்யாண விஷயம் மகாம்மாவுக்கு தெரியும்னு தாத்தா உளர, இல்லைத் தெரியாதுன்னு கூட பாக்கிய லட்சுமியும், அவளின் தங்கையும் சொல்லாமல் விட்டது இங்கு பெரும் பிழையாகி விட்டது. இத்தனை குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மகாலட்சுமி இனி வீட்டில் இருக்கக் கூடாதுன்னு வெளியே போக சொல்றான். தேவராஜ் தவிர மற்ற எல்லார் கண்ணிலும் கண்ணீர் வழிகிறது.
தேஜாவை கல்யாணம்
மகாலட்சுமியை வீட்டி விட்டு வெளியில் போக வேண்டாம்னு எல்லாரும் தடுக்க, தேவராஜ் இதுதான் சமயம் என்று, அவங்க இந்த வீட்டில் இருக்கணும்னா நீ நான் சொல்ற மினிஸ்டர் சகுந்தலா தேவியின் மகள் தேஜாவை கல்யாணம் செய்துக்க வேண்டும்னு சொல்றார் தேவராஜ். திகைத்து நிற்கின்றனர் வீட்டில் அனைவரும்.
பாக்கியலட்சுமி ரவி
தேவராஜ் அண்ணனை பாக்கிய லட்சுமி அடித்ததை கண்கூடாகப் பார்த்துவிட்ட ரவி, பாக்கிய லட்சுமியின் எந்த விளக்கத்தையும் கேட்காமல் அண்ணனுடன் கிளம்பி விட்டான். வீட்டில் போய் இத்தனைப் பிரச்சனை. இப்போது கண்ணீருடன் நிற்பது பாக்கிய லட்சுமிதானே... பெண்கள் தன்னைக் காத்துக் கொள்ளத் தயங்காமல் கயவனை கை நீட்டினால் தப்பு இல்லை. இந்த மாதிரி நேரங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பட்டர் பஞ்சு
பஞ்சு மிட்டாய் காத்துல பறந்து போச்சு. பட்டர் பிஸ்கட் டீயில் கரைஞ்சு போச்சு.இனி பாக்கிய லட்சுமியுடன் ரவி போனில்கூட பேசுவானா என்பது சந்தேகம்தான். அதோடு, இவர்கள் இனி வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களா,அதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்று பார்ப்போம்.
காரணம் ரவிக்கு கடும் பாதிப்பு, பாக்கிய லட்சுமிக்கு பெரும் இழப்பு