Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Lakshmi stores serial: கண்டுக்காம போறான் பட்டர் பிஸ்கட்... கண்ணீருடன் பஞ்சுமிட்டாய்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரன்னு ஒளிபரப்பாகிட்டு இருக்கு. பாக்கியலட்சுமி ரிஜிஸ்டர் ஆஃபீசில வைத்து தன் தாத்தாவை அடித்த தேவராஜை கன்னத்தில் பதிலுக்கு அறைந்து விடறா.
இதைப் பார்த்த ரவி கோபப்பட்டு, என்ன காரியம் செய்துட்டே பாக்கிய லட்சுமின்னு கத்தறான். உண்மையில் தாத்தாவை தேவராஜ் அறைய வரவில்லை. அக்காவைத் தள்ளி விட்டதும், பாக்கிய லட்சுமியின் தங்கை தன்னை எதிர்த்துப் பேசியதால் ,அவளை அடிக்கப் போன தேவராஜின் கை தாத்தா மேல் பட்டுவிடுகிறது.
என்னதான் தாத்தாவை தேவராஜ் அடித்திருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதர்.அவரை சட்டையைப் பிடித்து உலுக்கி பாக்கியலட்சுமி பல கேள்விகளும் கேட்டாச்சு. அதற்கு ப்பிறகும் தேவராஜை அடிப்பது என்றால், இது ரொம்ப மிகைதான்.
இன்று இரவு ரணகளமாகப் போகும் பிக் பாஸ் வீடு: குஷியில் பார்வையாளர்கள்
போகணும் மாகாலட்சுமி
பாக்கிய லட்சுமி, ரவி ரிஜிஸ்டர் கல்யாண விஷயம் மகாம்மாவுக்கு தெரியும்னு தாத்தா உளர, இல்லைத் தெரியாதுன்னு கூட பாக்கிய லட்சுமியும், அவளின் தங்கையும் சொல்லாமல் விட்டது இங்கு பெரும் பிழையாகி விட்டது. இத்தனை குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மகாலட்சுமி இனி வீட்டில் இருக்கக் கூடாதுன்னு வெளியே போக சொல்றான். தேவராஜ் தவிர மற்ற எல்லார் கண்ணிலும் கண்ணீர் வழிகிறது.
தேஜாவை கல்யாணம்
மகாலட்சுமியை வீட்டி விட்டு வெளியில் போக வேண்டாம்னு எல்லாரும் தடுக்க, தேவராஜ் இதுதான் சமயம் என்று, அவங்க இந்த வீட்டில் இருக்கணும்னா நீ நான் சொல்ற மினிஸ்டர் சகுந்தலா தேவியின் மகள் தேஜாவை கல்யாணம் செய்துக்க வேண்டும்னு சொல்றார் தேவராஜ். திகைத்து நிற்கின்றனர் வீட்டில் அனைவரும்.
பாக்கியலட்சுமி ரவி
தேவராஜ் அண்ணனை பாக்கிய லட்சுமி அடித்ததை கண்கூடாகப் பார்த்துவிட்ட ரவி, பாக்கிய லட்சுமியின் எந்த விளக்கத்தையும் கேட்காமல் அண்ணனுடன் கிளம்பி விட்டான். வீட்டில் போய் இத்தனைப் பிரச்சனை. இப்போது கண்ணீருடன் நிற்பது பாக்கிய லட்சுமிதானே... பெண்கள் தன்னைக் காத்துக் கொள்ளத் தயங்காமல் கயவனை கை நீட்டினால் தப்பு இல்லை. இந்த மாதிரி நேரங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பட்டர் பஞ்சு
பஞ்சு மிட்டாய் காத்துல பறந்து போச்சு. பட்டர் பிஸ்கட் டீயில் கரைஞ்சு போச்சு.இனி பாக்கிய லட்சுமியுடன் ரவி போனில்கூட பேசுவானா என்பது சந்தேகம்தான். அதோடு, இவர்கள் இனி வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களா,அதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்று பார்ப்போம்.
காரணம் ரவிக்கு கடும் பாதிப்பு, பாக்கிய லட்சுமிக்கு பெரும் இழப்பு