Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இக்கட்டில் பாக்கிய லட்சுமி இப்படியா மாட்டிக்கணும்...?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கியலட்சுமி காதலை ரவியிடம் சொல்ல முடியாதபடி சரியான இக்கட்டில் மாட்டிக்கறா
பாக்கியலட்சுமியின் அண்ணி எப்போதும் ரவி கூட பாக்கியலட்சுமி ஓடித்தான் போகப்போறான்னு கரிச்சு கொட்டிகிட்டு இருக்காங்க.
கடைசியில் பாக்கியலட்சுமி அண்ணியின் தங்கச்சி காதலனோடு ஓடிப் போய் கல்யாணம் செய்துகிட்டு திரும்பி வர்றா.
அனாமிகாவும் இல்லை... அனிதாவும் இல்லை... பாவம் நவீன்!
புதுமணத் தம்பதியை
புதுமண தம்பதியை வாசலில் நிக்க வச்சு அவமானப்படுத்தி அனுப்பிடறான் பாக்கியலட்சுமியின் அண்ணன். தங்கையை வீட்டை விட்டு அனுப்பியதில் பொண்டாட்டிக்கு கோவம். இந்த சமயத்தில்தான் பெங்களூருவில் மேட்ச் முடிச்சுட்டு வீட்டுக்கு வர இருக்கான் ரவி.
என்ன சொல்வது ரவியிடம்
ரவி வந்ததும் அந்த மூணு வார்த்தையை சொல்றோம்னு சொன்னோமே... என்ன சொல்றது.வீட்டில் அண்ணியின் தங்கை காதலையே அண்ணன் ஏத்துக்கலை. தாத்தாகிட்ட வேற சத்தியம் செய்து குடுத்து இருக்கோம். பிரச்சனை வர நாம் காரணமா இருக்க கூடாதுன்னு பாக்கியலட்சுமி நினைச்சுக்கறா.
பாக்கியலட்சுமி வனிதா
வனிதா வந்து மகாலட்சுமியிடம்... அக்கா... பாக்கியலட்சுமி அக்காவை ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி வைங்க...தாத்தாவுக்கு ஜுரம்...அக்கா பக்கத்துல இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கறார்.கடைக்கு வரட்டும். ஆனா.. ராத்திரியில வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு வந்துடட்டும்னு கேட்கறா.
வீட்டில் பாக்கியலட்சுமி
வீட்டுக்கு வந்ததும், எதுக்கு அக்கா மகா அக்காகிட்ட பொய் சொல்லி உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட சொல்லி சொன்னேன்னு கேட்கறா வனிதா. இல்லை வனிதா இனிமே நான் மகாக்கா வீட்டிலிருக்கறது நல்லதில்லைன்னு சொல்றா பாக்கியலட்சுமி.
உன் குழப்பம் என்ன
என்னக்கா சொல்றே..உன் குழப்பம்தான் என்னன்னு கேட்கறா.. ரவி என்னை காதலிக்கறேன்னு சொன்னாரு வனிதான்னு பாக்கியலட்சுமி சொல்ல, ஐ.. .நல்ல விஷயம்தானேக்கா... நீ என்ன சொன்னேன்னு கேட்கறா தங்கச்சி. கிரிக்கெட்ல ஜெயிச்சுட்டு வாங்க நான் சொல்றேன்னு சொன்னேன் வனிதா... ஆனா,என்னால சொல்ல முடியாது... நம்ம வீட்டு நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு வனிதான்னு சொல்றா.
ரவி உன்னைத் தேடி
சரி..ரவி உன்னைத் தேடி வீட்டுக்கு வர மாட்டாரா.. இல்லை கடைக்குத்தான் போக மாட்டாரா..உன் பிரச்னைக்கு இது தீர்வு இல்லைக்கான்னு வனிதா சொல்றா. அங்கு ரவி வீட்டுக்கு வந்ததும் பாக்கியலட்சுமியைத்தான் தேடறான்.நேரே வீட்டுக்கும் வர்றான்.அவ கடைக்கு போயிட்டதா சொல்ல..நேரே கடைக்கு போறான் ரவி.