பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறிய ரோஷினி.. கடைசி நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் குழு !
சென்னை : பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறி உள்ள ரோஷினிக்கு சீரியல் குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா சீரியல் உள்ளது.
இந்த சீரியல் பலவித திருப்பங்களுடன் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ரோஷினி ஹரிப்ரியன்
ஹீரோயின் என்றாலே வெள்ளைத்தான் என்ற எண்ணத்தை மாற்றியவர் ரோஷினி... அழகான கண்... அளவான அழகு என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். பாரதி கண்ணம்மா சீரியல் தான் இவருக்கு முதல் சீரியல் என்றாலும், தன்னுடைய அசாத்தியமான நடிப்பால், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்டார்.

விறுவிறுப்பான சீரியல்
4 ஆண்டுகள் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பலவித திருப்பங்களும் இருந்து வருகிறது. இவ்வளவு நாட்களாக தனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே பிறந்தார் என நினைத்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தது தெரிந்துவிட்டது. இன்னொரு மகள் ஹேமா என்ற உண்மையும் தெரிந்து விட்டது.

ரோஷினி விலகினார்
இதையடுத்து, பாரதியும் கண்ணம்மாவும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக ரோஷினி இந்த சீரியலிலிருந்து திடீரென விலகி உள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்ப அதிர்ச்சி
இந்நிலையில், ரோஷினி கடந்த 23ஆம் தேதி பாரதி கண்ணம்மா சீரியலுக்காக கடைசியாக நடித்து கொடுத்துள்ளார். ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ரோஷினிக்கு பாரதிகண்ணம்மா சீரியல் குழு ஒரு சிறிய பார்ட்டி வைத்து வழி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரோஷினி ஹரிப்ரியன் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











