Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டைவர்ஸ் வேண்டாம்.. மகள் ஹேமாவின் கதறல்.. பாரதி எடுக்கும் அதிர்ச்சிகரமான முடிவு!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது.
சமீப காலங்களில் இந்த தொடரின் டிஆர்பி குறைந்துவரும் நிலையில், அடுத்தடுத்து அரைத்த மாவையே அரைத்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில் மகளின் கதறலையடுத்து பாரதி முக்கியமான முடிவை எடுக்கிறார்.
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் விஜய்யா?..பாலிவுட்டில் கால் பதிக்கும் விஜய்!
பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் சிறப்பான கேரக்டர்கள் மற்றும் காட்சி அமைப்புகள் தொடரை டிஆர்பியிலும் முன்னேற்றியது. தொடர்ந்து சிறப்பான பல எபிசோட்களை தந்து வந்தது. ஆனால் அதற்கு பிறகுதான் மாற்றமே ஏற்பட்டது.
ரோஷினியின் விலகல்
இந்தத் தொடரின் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தவிர்க்க முடியாத காரணங்களால் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து அவரை கண்ணம்மாவாகவே பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் இதனால் தொடரின் மற்ற விஷயங்களை பார்க்கத் துவங்கினர். தொடர் தொடர்ந்து அரைத்த மாவையே அரைத்து வருவது அவர்களை சலிப்பிற்குள்ளாக்கியது.
ஒரே மாதிரியான காட்சிகள்
ரோஷினி விலகல் தொடர்ந்து பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவைப் பற்றிய காட்சிகள், குழந்தைகள் குறித்த ஒரே மாதிரியான காட்சிகள் என தொடர்ந்து ஒரே காட்சிகளை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடர் எப்போது முடியும் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தொடர் தற்போது மாறியுள்ளது.
விட்டுக் கொடுத்த முதல் இடம்
தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் தற்போது தன்னுடைய முதலிடத்தை பாக்கியலட்சுமியிடம் விட்டுக் கொடுத்துள்ளது. இதனிடையே தொடர்ந்து கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்த பாரதியிடம் தற்போது தடுமாற்றம் காணப்படுகிறது.
கதறியழும் ஹேமா
தற்போதைய எபிசோடில் மாமியார் வீட்டிற்கு கண்ணம்மா மற்றும் லஷ்மி வருகிறார்கள். அப்போது அங்குவரும் பாரதி இவர்களை பார்த்து தடுமாடுகிறார். அவருடன் வரும் ஹேமா சமையலம்மா என்று கண்ணம்மாவை கட்டிப் பிடித்து உற்சாகமடைகிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மா உயிருடன் இருக்கும்போது தன்னுடைய அப்பா அவரை டைவர்ஸ் செய்கிறார் என்று கதறி அழுகிறார்.
பாரதியின் உறுதியான முடிவு
கண்ணம்மாவிடம் தன்னுடைய தந்தை இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறுமாறும் கேட்கிறார். இதைப் பார்க்கும் பாரதி, தான் கண்ணம்மாவை டைவர்ஸ் செய்ய மாட்டேன் என்று உறுதியுடன் கூறுகிறார். இதை கேட்கும் கண்ணம்மா, சவுந்தர்யா உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக எபிசோட் முடிகிறது.
விரைவில் நிறைவு?
இது மட்டுமில்லாமல் வெண்பாவிற்கு சாப்பாடு தயாரித்து தருகிறார் கண்ணம்மா. இப்படியாக தொடரின் கதையோட்டங்கள் காணப்படுகின்றன. இதனால் கூடிய விரைவில் பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.