Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை
ஃபெப்சி பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஃபெப்சி பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே பிரம்மாண்ட வீடு போன்ற அமைப்பில் நடந்து வருகிறது. 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் கொண்டு நடத்தப்படும் இந்த படப்பிடிப்பில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஃபெப்சி அமைப்பு கடந்தவாரம் வெள்ளியன்று பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே போராட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி சம்மேனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளி மாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தார்.
மேலும், இப்பிரச்சனையை தீர்க்க சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜூன் 25 (இன்று) வரை அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்தும் நடவடிக்கை இல்லையெனில் 29 முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இதனால், பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக எண்டோமோல் நிறுவனம் ஃபெப்சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
எனவே, பிக்பாஸ் படப்பிடிப்பில் பிரச்சினை ஏதும் ஏற்படாது, தொடர்ந்து கமலே இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இது தொடர்பாக எண்டோமோல் நிறுவனமும், ஃபெப்சி அமைப்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.